|
தோளுக்குக்
கணையமரம்: பதிற். 31 : 19-20, உரை.
12 .பிணங்கள்
உயர்ந்த போர்க்களப்பரப்பில் துணங்கைக் கூத்தை ஆடி;
"மன்பதை பெயர வரசுகளத் தொழியக், கொன்றுதோளேச்சிய வென்றாடு
துணங்கை" (பதிற். 77 : 3-4)
13. அரசனுக்குச்
சோறு வேறு உளதென்று சொல்லாத எல்லோருக்கும்
ஒருபடித்தாக உயர்ந்த ஊனையும் துவையலையும் உடைய உணவை உண்ட;
சோற்றை வேறாகப்பிரித்து அறிய இயலாத ஊனும் துவையுமெனலுமாம்;
"செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை" (பதிற்.
55 : 7). இது பிண்டமேய
பெருஞ்சோற்று நிலையைக் கூறியபடி (பதிற்.
30 உரை). ஊன்றுவையடிசில்:
“அமிழ்தன மரபி னூன் றுவை யடிசில்” (புறநா.
390 : 14.) புறங்கொடுத்து
ஓடாத பெருமையையுடைய வீரர் உள்ளவிடத்தே விட்டுத் தங்கி.
15. அரிய வழிகளை
அடைத்தற்கு முள்ளிடுதலை யறியாத
எல்லையையுடைய பகைவரது; "இனநன்மாச் செலக்கண்டவர், கவைமுள்ளிற்
புழையடைப்பவும்" (புறநா. 98 : 7 - 8)
16-7. வில்லிலிருந்து
வரும் அம்பின் வேகத்தை அடங்கச்செய்த
வன்மையையுடைய, வெள்ளிய கிடுகுபடையைப்போன்ற பண்பினையுடைய
சேனையையுடைய அரசர். அடக்கிய தானை, அனைய தானையென்க.
"கழிப்பிணிக் கறைத்தோல்" (அகநா. 24
: 14) எனக்கருங்கடகும்
உண்டாதலின் வெண்டோல் என்பது இனமுள்ள அடை.
அசையாமைக்குத்
தோலுவமை: "தோல், துவைத்தம்பிற் றுளை
தோன்றுவ, நிலைக்கொராஅ விலக்கம்போன்றன" (புறநா.
4 : 5 - 6)
17-8. மன்னர்
இனி யார் உள்ளார்? நினக்கு முன்னும் இல்லை.
19-21. மேகம்
முகந்துகொள்ளக் குறையாமலும், ஆற்றுநீர் புகமிகாமலும்,
குறுக்காக வீசுகின்ற காற்றுச் செலுத்துகின்ற அசையும் பெரிய நிறைந்த
நீரினிடத்தே, விளங்குகின்ற மணி விட்டுவிளங்குதலைப் போல வேலை ஏற்றி
முழங்குகின்ற அலையையுடைய கடலிற்புக்கு ஒருதொழிலைச் செய்தற்கு
மறுத்தோராகிய மன்னர் (17) என இயைக்க.
19-22. "மழைகொளக்
குறையாது புனல்புக மிகாது, கரைபொருதிரங்கு
முந்நீர் போல" (மதுரைக். 424 - 5)
மன்னராகிய (17)
மறுத்திசினோர் (22) நின் முன்னும் இல்லை; இனியார்
உளர் (18) என முடிக்க. (5)
| 46. |
இழையர்
குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு
திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை
மகளிர் |
| 5 |
தொடைபடு
பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபி னுழிஞை பாட இனிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ்
சுரத்தலிற் |
|