அவருடைய இரத்தத்தை
அளைதலால் சிவந்த கையையுடைய வீரரது; வீரர்
மோகூர் மன்னனது படையிலுள்ளார்.
11. நிறம் உண்டாகின்ற
இரத்தம் நிலத்தில் தவழ்ந்து ஓடி.
12. மழை பெய்யும்
நாளிலுண்டான செங்கலங்கல் நீரைப் போலப்
பள்ளங்களிலே பரவிப் பாய.
11-2. குருதிக்குச்
செம்புனல்: "செந்நில மருங்கிற் செஞ்சால் சிதைய,
மரஞ்சுமந் திழிதருங் கடும்புனல் கடுப்பக், குருதிச் செம்புனல் போர்க்களம்
புதைப்ப" (பெருங். 1. 46 : 67
- 9)
13. இறந்த பிணம்
உயரும்படி பாழ்பலவற்றைச் செய்து.
14. ஒலிக்கின்ற
கண்ணையுடைய வீரமுரசம் போர்க்களத்தின் நடுவே
ஒலிப்ப. மு. பதிற், 54 : 13.
15-7. நாட்டின்
வளன் அழியவும், விளங்கி வாழ்வார் பலர் இறப்பவும்,
கரிய கொம்புகளையும் மற்றக்காவல்மரங்களை வென்ற வெற்றியையும் உடைய
வேம்பை வெட்டிய பெரிய சினத்தையுடைய குட்டுவனைக் கண்டு வருவதற்கு.
விறலைப் புலப்படுத்தும் வேம்பெனலுமாம். வேம்பு மோகூர் மன்னனது காவல்
மரம் (பதிற்.44: 14 - 5; 5-ஆம் பதிகம்,
13 - 4); "பழையன் காக்கும்
குழைபயி னெடுங்கோட்டு, வேம்புமுதறடிந்த வேந்துவாள் வலத்துப்,
போந்தைக் கண்ணிப் பொறைய" (சிலப்.
27 : 124 - 6). நிகழ்ந்து - நிகழ;
எச்சத்திரிபு.
குட்டுவற் கண்டனம்
வரற்கு (17) யாமும் சேறுகம் (1); விறலியர் (2),
நீயிரும் வம்மின் என முடிக்க.
வளஞ்செருக்கிய
மோகூர் மன்னனது நாட்டை அழித்ததைக் கூறினார்
நம்போன்ற இரவலர்க்கு வரையாது கொடுக்க அவ்வளம் உளதாயிற்றென்னும்
கருத்துப்பற்றி. (9)
50.
| மாமலை
முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச் |
5
| செங்குணக்
கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை
கொல்களிற், றுரவுத்திரை பிறழ வவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர |
10
| விரவுப்பணை
முழங்கொலி வெரீஇய வேந்தர்க்
கரண மாகிய வெருவரு புனற்றார்
கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவும்
அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த
ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து |
|