பக்கம் எண் :

148

மு. 'இக்கதையைப் பதிற்றுப்பத்தினுள் அஞ்சாம் பத்தின் முடிவின்கண்,
"வடவ ருட்கும்" என்னும் கவியுள்ளும்.......................காண்க' (சிலப். பதி. 1 - 2,
அடியார்.)

                   ஐந்தாம்பத்து முற்றிற்று

                     ஆறாம் பத்து

51. துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை
 5 குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்
 10 தியலின ளொல்கின ளாடு மடமகள்
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பௌவத்துக்
 15 குணகுட கடலோ டாயிடை மணந்த
பந்த ரந்தரம் வேய்ந்து
வண்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல்
நனையுறு நறவி னாடுடன் கமழச்
சுடர் நுதன் மடநோக்கின்
 20 வாணகை யிலங்கெயிற்
றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை யுறைதலின்
வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே
 25 மழைதவழும் பெருங்குன்றத்துச்
செயிருடைய வரவெறிந்து
கடுஞ்சினத்த மிடறபுக்கும்
பெருஞ்சினப்புய லேறனையை