|
தாங்குநர்,
தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும் |
30 |
எஃகுடை
வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை
கைவ லிளையர் கையலை யழுங்க |
35 |
மாற்றருஞ்
சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையா னெடுந்தகை செருவத் தானே. |
துறை - வஞ்சித்துறைப்பாடாண்
பாட்டு. வண்ணம் - ஒழுகு
வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - வடுவடு நுண்ணயிர் (8).
(ப - ரை)
3. குடபுலமென்றது தன் நகரிக்கு மேல்பாலாம்.
மாச்சினைச்
சேக்கும் (5) பொழில் (9), வண்டு இறைகொண்ட (6)
பொழில் (9), அடைகரைப் (7) பொழில் (9) எனக் கூட்டுக.
8. வடுவையடுதல்
- வடுவை மாய்த்தல். ஊதை உஞற்றுதல் - அவ்வடு
மாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை; அயிர் -
நுண்மணல்.
வடுவை மாய்க்கும் நுண்ணயிரெனற்பாலதனை வடுவடு நுண்ணயிரென்று
கூறிய சிறப்பானே இதற்கு, 'வடுவடு நுண்ணயிர்'
என்று பெயராயிற்று.
9. பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவுபெற்றென்றவாறு.
10. இயலுதல்
- உலாவுதல். ஒல்குதல் - அசைதல்.
11. வெறியுறு
நுடக்கம் - இயல்பாக நுடங்கலன்றித் தெய்வமேறிய
விகாரத்தால் நுடங்குதல். 13. அரவழங்குதல் - அரவாடுதல்.
11-3.
வெறியுறு நுடக்கம்போல அரவழங்குமெனக் கூட்டுக.
அரவழங்கும்
(13) பெருமலைப் (12) பெருந்தெய்வம் (13) என மாறிக்
கூட்டுக. 12. பெருமலை : இமயம்.
குணகுடகடல்
(15) எனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின்
கூறுகின்றமையான், வளைஞரலும் பனிப்பௌவம் (14) என்றது
தென்னெல்லையாம்.
தெய்வத்து
(13), பௌவத்து (14) என்னும் அத்துக்கள் ஈண்டுச் சாரியைப்
பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலையெனப்படும்.
15. ஒடு:
எண்ணொடு. ஆயிடையென்றது அவற்றின் நடுவென்றவாறு.
பெருந்தெய்வம்
(13) பனிப்பௌவம் (14) குணகடல் குடகடல் (15)
ஆகிய அவ்வெனக் கூட்டுக.
1அவ்வென்னும்
சுட்டுமுதல் வகாரவீற்றுப்பெயர் ஆயிடையென
முடிந்தது.
1பதிற்.
11: 24, உரை.
|