19-21.
விறலியரது வருணனை.
ஒளி பொருந்திய
நெற்றியையும், மடப்பம் பொருந்திய பார்வையையும்
மிக்க ஒளியையுடைய விளங்குகின்ற பற்களையும், அமிழ்துபோன்ற நீரை
அடக்கிய சிவந்த வாயையும், தளர்ந்த நடையையுமுடைய விறலியரது.
வாள்நகை:
ஒருபொருட்பன்மொழி.
22. பாடல்
மிகுதலின் அங்கே தாமதித்தனையாய்த் தங்குதலால்.
23-4. வெள்ளிய
வேலையுடைய சேரன் ஐம்புலன்களிடத்தும்
நெகிழ்ச்சியுடையான் போலுமென்று நின் இயல்பை முற்ற உணராதோர்
நினைப்பார்களோ?
25-8. சேரனுக்கு
இடி உவமை.
மேகங்கள்
தவழ்கின்ற பெரிய மலையில், குற்றமுடைய பாம்புகளை
உருட்டி அவற்றின் மிக்க கோபத்தையுடைய வன்மையைக் கெடுக்கும் மிக்க
சினத்தையுடைய மேகத்தில் தோன்றும் சிறந்த இடியை ஒப்பாய்.
பகையரசர்க்குப்
பாம்பும் சேரனுக்கு இடியும் உவமை; வரையுதிர்க்கு,
நரையுருமி னேறனையை" (மதுரைக். 62
- 3): "இளையதாயினுங் கிளையரா
வெறியும், அருநரை யுருமிற் பொருநரைப் பொறா அச் செருமாண் பஞ்சவ
ரேறே" (புறநா. 58 : 6 : 8)
29-30.
சேரனுடைய படைவீரரது சிறப்பு.
தம்மைத்
தடுத்து நிற்பவரது வளைந்த துதிக்கையையுடைய யானையினது
பூணை அணிந்த கொம்பை வெட்டும் வாளையுடைய வெற்றியையுடையர்
நின்படையில் வாழும் வீரர்.
31-7. போர்க்களத்தில்
சேரனுடைய நிலை.
31-2. வீரம்பொருந்திய
பனையின் வெள்ளிய ஓலையை அணிந்து,
இரத்தத்தால் தன் நிறம் நீங்கிய போர்க்கண்ணியிடத்தே உறுதலைப் பருந்து
ஆராயவும். இரத்தம் படிந்த பனந்தோட்டைப் பருந்து ஊனென்று மயங்கி
அதனைக் கொத்தக் கருதியது. புனைந்து நோக்கலை (36) என இயையும்.
33-4. மாமிசத்தையுடைய
அம்பு கிழித்த கரிய கண்ணையுடைய
தண்ணுமை வாசித்தலிற் கைவல்ல இளையர்தம் கையால் வருந்துதல் கெடவும்.
தூக்கணை: "புலவுக்கணை" (பு. வெ. 10)
35-7. நெடுந்தகாய்,
பரிகாரம் இல்லாத கோபத்தையுடைய கரிய பெரிய
கூற்றுவன் தன்வலையை விரித்தாற்போன்ற பார்வையையுடையையாய்ப்
போர்க்களத்தில் பகைவர்க்கு அச்சத்தைச் செய்தலையுடையாய்; " நீயே
மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக், கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே" (புறநா. 42
: 22 - 4)
விறலியர்
பாடலை நுகரும்பொழுது உருகுதலும் வன்மையும்
உடையனாகி மெல்லியன் போலத் தோற்றினாலும் பகைவரை அடுதலில்
மிகவலியானென்றபடி.
(பி
- ம்) 12. விலங்கு மட்டுமணி. 13. அரவு வழங்கும் 33. தூகணை
கிழித்த. 35. மாவருங்கூற்றம் 37. கடியைநெடுந்தகை செருவகத்தானே. (1)
52. |
கொடிநுடங்கு
நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி |
|