|
கட்டினாற்போன்று
விளங்குகின்ற நினது பழையதாகிய புகழையுடைய பழைய
நகருக்கு மீண்டு செல்வாயானால். கடறு - காடு; காடென்றது மதிலைச் சூழ்ந்த
காவற்காட்டை. மலைநாடாதலின் கல்பிறங்குவைப்பிற் கடறென்றார்.
6-9.
மதிலின் சிறப்பு.
6-7.
சிவந்த மூட்டுவாயையுடைய சிலம்பொடு அணியாகிய தழை
தங்குகின்ற எந்திரக்கட்டினையும், அம்பையுடைய வாயிலையும்;
பொறிமூட்டுவாய்: "பொறி, புனைவினைப் பொலங்கோதை" (பரி.
11 : 64 - 5)
"எய்பெயரும் பகழி வாயிற் றூக்கி" (தொல்.
புறத். 12, ந. மேற்.)
8. நீந்திச்
செல்ல முயல்வாரைக் கொள்ளுதல் வல்ல முதலையையும்
குழிந்த இடத்தையும் கொண்ட அகழியையும் உடைய; "கராஅங் கலித்த
குண்டுகண் ணகழி" (புறநா. 37 : 7)
9. ஆகாயத்தைப்
பொருந்தும்படி உயர்ந்த, அவ்வகழியை வளையும்படி
செய்த மதில், புரிசை ஆகிய மன்னெயில் (11) என இயைக்க.
10-11.
நின்னோடு பொருந்தாத பகைவரது போர் கெடும்படி தடுத்து,
நின்னாற் கைக்கொண்டு கொடுக்கப்பட்ட நிலைபெற்ற மதில்களிடத்துச்
செலுத்துவதே அல்லாமல்.
12-3.
தாம் இறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் நின்குலத்து முன்னோர்
அளித்த மதில்களிடத்தே செலுத்துவது நினக்கு என்ன காரியம்? அது
நின்பெருமைக்குப் பொருந்துவது அன்று.
13-4.
சினம்பொருந்திய குருசிலே! வளைந்து செல்ல வேண்டிய
தாயினும், வேறு வழியே செல்லுவாயாக. 15 - 6. மதிற்கதவின் சிறப்பு.
கணையமரத்தாற்
பாதுகாக்கப்பட்டு, இரும்பினாற் பிணித்தலையுடைய
பலகையாற் செய்யப்பட்ட, பலநிலைகளையுடைய கோபுரவாயிலிலேயுள்ள
கதவை மெய்யாகக் கண்டால். 17 - 8. சேரனது யானையின் சினம்.
17. உண்ணும்
பொருட்டுத் தேனீக்கள் பரவிய மதத்தால் குத்துக்
கோலைக் கடந்த; மதம் போர் வேட்கையால் பிறந்தது.
18. நிறத்தால்
வேங்கைமலரைவென்ற புள்ளிகள் விளங்கித்
தோன்றுகின்ற நெற்றியினிடத்தே; புகர்நுதல்: வாளா பெயர் மாத்திரையாய்
நின்றது.
19. ஏந்திய
கையைச் சுருட்டி அங்குசத்தைக் கடந்து; "மதமாக்
கொடுந்தோட்டி கைந்நீவி" (பரி. 10 :
49)
20. மேம்பட்ட
என்றமையால் எடுத்த கொடி தன்மீது அசைய.
21. நின்களிறுகள்
அவ்விடத்தே அடங்குதல் ஆகா.
கதவு மெய்காணின்
தாங்கலாகாவென்றதன் கருத்து அக்கதவைத்தன்
கொம்பாற் குத்தச் செல்லுமென்றபடி; "நீண்மதி லரணம் பாய்த்தெனக்
தொடிபிளந்து, வைந்துதி மழுகிய தடங்கோட்டியானை" (ஐங்குறு.
444)
நின்முன்னோராற்
பாதுகாக்கப்பட்ட வேந்தரது மதில்வழியே செல்லற்க;
வேறுவழியே செல்க என்பது கருத்து.
(பி
- ம்) 4. கடறரையார்த்த. 6. செம்பொற் சிலம்பு. 17. காழக நீவி.
(3)
| 54. |
வள்ளியை
யென்றலிற் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள் |
|