ஆண்மையினையும்
(19) வாளினையும் (20) உள்ளத்தினையும் (21)
உடைய குருசிலென்க.
15. மழையை அவன்றன்னோடு
உவமியாது அவன் நாளோடு (21)
உவமித்தது, அவனோடு 1அவன் நாளுக்குள்ள ஒற்றுமை பற்றியென்க.
ஆன்றோள் கணவ,
சான்றோர் புரவல (1), நின்னயந்து வந்தனென்;
கொற்றவ (2) பொருந (6), மழவர் மெய்ம்மறை (8), கோவே, அண்ணல் (9),
தோன்றல் (12), பெரும (16) குருசில், நின்னாள் (21) வெண்மழை போலச் (15)
சென்றாலியரோ (16) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
பெரும, குருசிலென்னும்
விளிகள் முன்னின்ற விளிகளோடு கூட்ட
வேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற் சொல்லியது
அவன் உலகுபுரத்தாலும் தன் குறையும் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. கற்பினாற் சிறந்தோளுடைய தலைவ, நற்குணங்களால்
நிரம்பியவர்களைப் புரத்தலில் வல்லோய். ஆன்றோன் கணவ: பதிற்.
14 : 15,
உரை. சான்றோர் - வீரரெனலுமாம். 2. கொல்லுகின்ற போரைச் செய்யும்
அரசே, நின்னைக் காண விரும்பி வந்தேன்.
3-6. சேரநாட்டின்
செல்வச் சிறப்பு.
இனிய ஓசையையுடைய
அலைகள் ஒலிக்கும் கடலிலே வந்த நல்ல
ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டசாலைகளையும், மணம் வீசுகின்ற
தாழைகளையுடைய கடற்கரைச் சோலைகள் பொருந்திய அழகிய பெரிய
துறைகளையும் உடைய குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நல்ல நாட்டுக்கு
உரிய ஒப்பற்றோய். பொருநன் - தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான்
(மதுரைக். 42, ந. ; பதிற்.
73 : 2 - 3; புறநா. 377 : 10 - 11)
7-8. சிவந்த
இறைச்சி தனியே வேறுபட்டுத் தோன்றாத வெள்ளிய
துவையலையும் அவரை துவரை முதலியவற்றைக் கலந்த வெள்ளிய
நிணத்தையுடைய இறைச்சியாகிய உணவையுமுடைய மழவர்க்குக் கவசம்
போன்றாய்; "சான்றோர் மெய்ம்மறை" (பதிற்.14:12)
9. குடநாட்டிலுள்ளார்க்கு
அரசே, கொடிகளையணிந்த தேரையுடைய
தலைவனே. குடவர்கோ: சிலப். 24 : பாட்டுமடை.
10-12. நின்நாட்டில்
வறுமையில்லாமையால் இரவலர் வாராரானாலும்,
அவர்களைப் பெறவிரும்பித் தேரை அவர்கள் உள்ள பிறநாடுகளிலே அனுப்பி
அதில் அவர்களைக் கொணர்ந்து அவர்களுக்கு உணவைத்தரும், பகைவரும்
கேட்டற்கு விருப்பம் மிகுதற்குக் காரணமான உண்மையான மொழியையுடைய
புகழ்மிக்க தலைவனே. ஆர்பதம்: பதிற்.
66 : 9.
நசைசால் வாய்மொழி:
"கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்,
வேட்ப மொழிவதாஞ் சொல்" (குறள். 643)
என்பதும் அதன் உரையும் இங்கே
அறிதற்பாலன.
13. நீ வேண்டிய
கால அளவில் ஆண்டுகள் பல கழியும்படி.
14. நெடுநல்.
19; அகநா. 217 : 1.
14-6. பெருமையையுடையாய்,
மழையைப் பெய்து, உலகத்தைக்
காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப்போலப் பொங்கியெழுதலைச் செய்து
1இக்காலத்தும்
திருவாங்கூரரசர் நாளின்பெயரால் வழங்கப்படுதல்
அறியத்தக்கது; "நின்று நிலைஇயர் நின் னாண்மீன்" (புறநா.
24 : 2)4
|