(கு
- ரை) 1-3. விழா பெருமையோடு விளங்கிய அகன்ற தன்
ஊரினிடத்தே, கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலை வல்லவன் அல்லன்;
அவன் கண்ணி வாழ்வதாக.
4. வெற்றியுண்டாதற்குக்
காரணமான முரசம் ஒலிப்ப, வாளை உயர வீசி.
வலம்படு முரசம்: பதிற். 17 : 5, உரை.
5. விளங்குகின்ற
ஆபரணங்களை அணிந்து, பொன்னாற் செய்த
கொடியாகிய உழிஞையினது பூவைச் சூடி.
6-8. அறியாமை
மிகுதலால் பகைகொண்டு படையெடுத்துவந்த
பகைவேந்தர் தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம்
அழிந்துகெட்ட போர்க்களத்தில் ஆடு அரசன்; "கழித்துவா ளமலை யாடிக்
காட்டுவார்" (சீவக. 783)
ஆடுகோ (8) ஆடல்
(2) வல்லானல்லன்; அவன் கண்ணி வாழ்க (3)
என முடிவு செய்க.
கண்ணியை வாழ்த்தல்:
பதிற். 54 : 2, உரை
மு.
"தேரின்கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக்
களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பிணைந்து
ஆடும் குரவை' (தொல், புறத், 21. ந.) (6)
57. |
ஓடாப் பூட்கை
மறவர் மிடறப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை யாடிய வலம்படு கோமான் |
5 |
மெல்லிய
வகுந்திற் சீறடி யொதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி |
10 |
இளந்துணைப்
புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை
ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும் |
15 |
புரவெதிர்
கொள்வனைக் கண்டனம் வரற்கே. |
துறை
- விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- சில்வளை விறலி (6)
(ப - ரை.)
மறவர் மிடறபக் (1) களத்தோன் (3) எனக் கூட்டுக.
3. பனிற்றுதல்
- தூவுதல்; பனிற்றுவது புண்பட்ட வீரருடலெனக்
கொள்க. களமென்றது ஈண்டுக் களத்தையணிந்த பாசறையினை.
|