5. 1வகுந்து
- வழி.
6. சில்வளை
விறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப்
பருவத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல்
முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'சில்வளை விறலி' என்று பெயராயிற்று.
8. விரல்கவர்
யாழென்றதனாற் பயன் வாசித்துக் கைவந்த
யாழென்றவாறு.
9. தழிஞ்சி
- தழிஞ்சியென்னும் துறைப்பொருண்மேல் தந்த பாடல்.
தழிஞ்சியைக் குரல்புண ரின்னிசையிலே பாடியெனக் கொள்க.
10. புதல்வராகிய
நல்வளமென இருபெயரொட்டு.
11. குடைச்சூல்
- சிலம்பு.
சில்வளை விறலி
(6), புரவெதிர்கொள்வனைத் (15) தழிஞ்சிபாடி (9)
கண்டனம் வரற்கு (15)ச் செல்லாமோ (6); அப்புரவெதிர்கொள்வனாகிய (15)
வலம்படு கோமான் இதுபொழுது தான் அவ்வெதிர்கோடற்கேற்ப
வருவாயினையுடைய (4) புலவுக்களத்தோன்காண் (3) என மாறிக்கூட்டி
வினைமுடிவு செய்க.
வரற்குச் (15)
செல்லாமோ (6) எனக் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற் சொல்லியது
அவன் வென்றிச்சிறப்போடு அவன்
கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. புறங்கொடுத்து ஓடாமைக்குக் காரணமாகிய
மேற்கோளையுடைய வீரரது வலி கெடும்படி. ஓடாப் பூட்கை; பதிற்.
34 :2,
2-3. பெரிய
பனந்தோடாகிய மாலையொடு சிறந்த வீரக்கழல்
சிவக்கும்படி இரத்தத்தைக் தூவுகின்ற புலால்நாற்றத்தையுடைய களத்தை
யணைந்த பாசறையிலுள்ளான் (பதிற். 42 :
1, உரை,)
4. போர்க்களத்தில்
துணங்கைக் கூத்தை ஆடிய வெற்றியுண்டாகும்
சேரன். கோமான் (4) புலவுக்களத்தோன் (3) என முடிக்க.
5-6. சிலவாகிய
வளையை அணிந்து விறலி, நிலம் மெல்லிய வழியில்
சிறிய அடியால் நடந்து செல்லாமோ; செல்லாமோ: செல்லுவாமோ என்பதன்
மரூஉ. 'மெல்லங்கழி : மென்மை, நிலத்தின் மென்மை' (திருச்சிற்.
177, பேர்.)
8 : பதிற். 66 : 1 - 2.
7-9. பாணரது
கையின்கண் உள்ளதாகிய பணிந்த கட்டினையுடைய
நரம்பினையுடைய விரலால் வாசித்துப் பழகிய பேரியாழைப் பாலைப்பண்ணாக
அமைத்து, மிடற்றுக்குரலோடு ஒன்றுபட்ட இனிய இசையிலே தழிஞ்சி
யென்னும் துறைப்பொருள் அமைந்த பாடல்களைப் பாடி; தழிஞ்சி: 'வேந்தர்
தம்படையாளர் முன்பு போர்செய்துழிக்கணையும் வேலும் முதலிய படைகளைத்
தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாம் சென்று பொருள்
கொடுத்தும் வினாவியும் தழுவிக் கோடல்; தழிச்சுதல் : தழிஞ்சியாயிற்று' ;
"தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன்
- விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன, புல்லணலார்
வெய்துயிர்க்கும் புண்" (தொல். புறத்.
8. ந, மேற்.); "அழிகுநர்
புறக்கொடையயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று"
(பு. வெ. 55)
1வகுந்து
: "வரைசேர் வகுந்திற கானத்துப் படினே" (மலைபடு,
242)
|