பக்கம் எண் :

168

     10. இளைய துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப் பெற்ற.

     11. மு. பதிற். 90 : 48. 11-3. தொழில்வளம் பொருந்திய சிலம்பையும்,
அடங்கிய கொள்கையையும், நிறைந்த அறிவையும் உண்டாகிய புகழையும்,
ஒள்ளிய நெற்றியையும் உடைய மகளிர் ஊடலாற்சினந்து பார்த்த பார்வைக்கு
அஞ்சுதலைக் காட்டிலும், குடைச்சூல் - புடைதாழ்த்தல்; புடைபட்டு
உட்கருவை யுடைத்தாதல்; குடைபடுதல்' (சிலப். 16 : 118. அரும்பத;
அடியார்.
)

     14-5. இரவலரது துன்பத்தை அஞ்சுகின்ற, நம் குடியைப் புரத்தலை
ஏற்றுக்கொள்வோனைக் கண்டுவருதற்பொருட்டு. கண்டனம் வரற்கு (15) விறலி,
செல்லாமோ (6) என முடிக்க.

     (பி - ம்.) 3. புலக்களத்தோனே. 11. குடச்சூல். 13. துணித்த. (7)


58.



ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்
வாண்முகம்பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர்
 5




இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல
துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின்
 10




எயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
 15




புன்புலம் வித்தும வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - ஏவிளங்கு தடக்கை
(10)

     (ப - ரை) 2. வெண்டோடு - பனந்தோடு; தோட்டின் கண்ணென
விரிக்க. அசைத்தல் - தங்குவித்தல். 3. வாண்முகம் - வாள்வாய்.

     குவளையர் (2) என்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று; அதனைக்
கூறி (7) என்பதனொடு முடிக்க.