பக்கம் எண் :

173

60.



கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியா
 5




தரம்போழ் கல்லா மரம்படு தீங்கினி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடைய மறவர்
 10


பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- மரம்படு தீங்கணி
(5)

     (ப - ரை) 4. மிஞிறு புறமூசவும் தீஞ்சுவை திரியாமை அப்பழத்தின்
புறத்து வன்மையால்.

     5. அரம்போழ்கல்லாவென்றது புறத்து வன்மையால் அரிவாளும்
போழமாட்டாவென்றவாறு. 'அரம்போழ்கல்லாமரம்படு தீங்கனி' என்றது
1புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு.

     இச்சிறப்பானும் முன்னும் பின்னும் வந்த அடைச்சிறப்பானும் இதற்கு;
'மரம்படு தீங்கனி' என்று பெயராயிற்று.

     6. முண்டை விளைபழம் - முட்டைகள்போலும் விளைபழம்;
முட்டையென்றது 2மெலிந்தது.

     மரம்படு தீங்கனியாகிய (5) முட்டை விளைபழம் (6) என
இருபெயரொட்டு.

      ஓய்தகை தடுக்கும் (7) துவ்வா நறவு (12) எனக் கூட்டுக.

     8. அறாஅ யாணரென்றது இடையறா கடல்வருவாய் முதலாய
செல்வங்களை. 9. தொடைமடி - அம்புதொடுத்து எய்தலில் மடிதல்.

     10. புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும் கொள்க.
மயங்கவெனத் திரிக்க; மயங்குவது வருகின்ற ஊதை (11) எனக் கொள்க.

     மறவர் (9) கடலூதையிற் பனிக்கும் (11) நறவு (12) எனக்கூட்டி,
ஆண்டுவாழும் மறவர் 3கடலூதையால் மட்டும் நடுங்கும் நறவென்க.

      12. நறவு - ஓரூர்; துவ்வா நறவு - வெளிப்படை.

     அவன்றான், இப்பொழுது துவ்வாநறவின் சாயினத்தான் (12)


     1“புறக்கா ழனவே புல்லென மொழிப” (தொல், மரபு, 85)

     2தொல், எச்ச. 7.

     3“செஞ்ஞாயிற்றுத் தெறவல்லது, பிறிதுதெற லறியார்நின்னிழல்
வாழ்வோரே” (
புறநா. 20 : 8 - 9) என்பதனோடு ஒப்புநோக்குக.