|
குடக்கோ
நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக் |
5
|
கபிலையொடு
குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவிக்கொள் வாரிற் குடிபுறந் தந்து |
10
|
நாடல்
சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக் |
காக்கைபாடினியார்
நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: வடுவடு
நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி,
நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி,
ஏவிளங்கு தடக்கை, மாகூர்திங்கள், மரம்படுதீங்கணி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்றபரிசில்:
கலனணிகவென்று அவர்க்கு ஒன்பது
1காப்பொன்னும் நூறாயிரங்காணமுங்கொடுத்துத் தன்பக்கத்துக் கொண்டான்
அக்கோ.
ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.
(கு
- ரை) 1. குடக்கோ - குடநாட்டிலுள்ளார்க்குத் தலைவன்.
3. தண்டாரணியம்
- தண்டகாரணியம் என்பதன் சிதைவு;
"தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி" (சீவக.
337). கோட்பட்டவருடைய
- பகைவரால் கொள்ளப்பட்ட மலையாடுகளை.
4. தொண்டியுள்
தந்து - மேல்கடற்கரையிலுள்ள தொண்டி நகரத்தே
கொண்டுவந்து; "திண்டேர்ப் பொறையன் றொண்டி" "விறற்போர்க் குட்டுவன்,
தெண்டிரைப் பரப்பற் றொண்டி" (அகநா.
60 : 7, 290 : 12 - 3)
3-4. இவ்வடிகளில்
தலைவன் பெயர்க் காரணம் அமைந்துள்ளது.
4-5. அந்தணருக்குப்
பசுக்களோடு குடநாட்டிலுள்ள ஓரூரைக்
கொடுத்து; இது 'கபிலை கண்ணிய வேள்விநிலை' (தொல்.
புறத். 35)
எனப்படும்.
1கா:
ஒரு நிறையின் பெயர்; "காவெ னிறையும்" (தொல்.
தொகை மரபு.
27). காணம் - பொற்காசு; 'காண மிலியெனக் கையுதிர்க்கோடலும்' (மணி
16;
10); பழங்காசு (சீவக.
1: 117. ந.) . |