பக்கம் எண் :

181

மலையைப் போன்ற மதிலையும் உடைய, தம் பகைவரை வருத்து தலையுடைய
பெரிய கையையுடையராய் வணக்கத்தைச் சொல்லி; "தோட்டியின் வணக்கம்
வேட்டவன் விரும்பி" (பெருங். 1. 45 : 64). தோட்டி வளைந்திருத்தலின்
வணக்கத்திற்குப் பெயராயிற்று. வரை போலிஞ்சி: பதிற். 16 : 1, உரை.

     12. நின்னுடைய பகைவர் வணங்கித் திறை கொடுப்பாராயின்.

     13. புல்லையுடைய அகன்ற முல்லைநிலத்தில் பல பசுக்களைப் பரவச்
செய்து. மு. பதிற். 21 : 21.

     14-5. வளப்பத்தையுடைய வயல்களில் விளைந்த பயிர்களினின்றும்
உதிர்ந்த, களத்தில் கடாவிடுதலில்லாத தூற்றாப் பொலியைக் காஞ்சிமரத்தின்
நிழலில் தொகுத்து.

     16. "கள்ளா ருவகைக் கலிமகி ழுழவர்" (அகநா. 346 : 5)

     16-8. கள்ளை யுண்ணுதலையுடைய வலிய கையையுடைய தொழில்
செய்யும் உழவர், நீரினிடத்தே வளர்ந்த ஆம்பற்பூவைத் தலையின் கண்ணே
சூடியவராய், அதனிடத்தே மொய்த்தற்கு வரும் ஆடுகின்ற சிறகையும்
கோடுகளையுமுடைய வண்டுகளை ஓட்டுதற்கு இடமான.

     அருவியாம்பல்: பதிற். 71 : 2.

     19. அப்பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள், பாடல்
மிக்கன ஆகும்.

     (பி - ம்.) 6. மல்கிய. 7. எழுதரு. 11. கொட்டி செப்பி. 12. பகைஞர்.                                                        (2)

 

63. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்
 5 மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
 10 குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி
ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயும்
 15 நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற்
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி