செய்த அறம் உண்டாயின்.
19. ஆம்பல்: பரி. 2 : 13, 3
: 44.
20.
வெள்ள ஊழி: மதுரைக். 22 : 3;
ஐங்குறு. 281 : 1 - 2.
21.
இவ்வடியில் பாட்டுடைத் தலைவனது பெயர் அமைந்துள்ளது.
19-21. அடை
அடுத்தலை அறியாத, பூக்கள் அரிதாகிய பல ஆம்பல்
என்னும் எண்ணும், ஆயிரத்தாற் பெருக்கிய வெள்ளமென்னும் எண்ணும்
ஆகிய எண்களின் அளவுள்ள பல ஊழிகள் நீ வாழ்வாயாக.
17-21. பதிற்.
90 : 51 - 4; "இவ்வுலகத்துச் சான்றோர் செய்த
நன்றுண்டாயின்..............வாழிய பலவே" (புறநா.
34 : 19 - 22); "ஒன்று
பத்தடுக்கிய கோடிகடை யிரீஇய, பெருமைத் தாகநின் னாயு டானே"
(புறநா. 18 : 5 - 6). மு,
இது, வாகைத்துறைப் பாடாண்பாட்டு (தொல்.
புறத். 26, ந.)
(பி
- ம்) 5. மலைப்பு. 9. கொண்டமை. 10. குன்றினிலை. 15. நுந்நுங்
கொண்டினும் வென்றோயே. 19. கடையெடுப்பறியா. (3)
64.
|
வலம்படு
முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால வேள்வி முடித்த கேள்வி |
5
|
அந்தண
ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி |
10
|
அலங்கும்
பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் |
15
|
காண்கு
வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற்
பசியுடை யொக்கலை யொரீஇய |
20 |
இசைமேந்
தோன்றனின் பாசறை யானே. |
துறை
- 1காட்சிவாழ்த்து. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் -
உரைசால் வேள்வி. (4)
1பதிற்.
41, துறை. |