|
பொன்னாற் செய்த
ஆபரணங்களை அணிந்த அரசர் பலர் உலகத்துள்ளார்;
அவரால் யாது பயன்? தில்: ஒழியிசைப் பொருளில் வந்தது.
4. கேள்வி,
வேள்வி: பதிற். 74 : 1 - 2.
4-5. "கேள்வி
யந்தண ரருங்கட னிறுத்த, வேள்வித் தூணத்து"
(பெரும்பாண். 315 - 6)
3-5. அறத்தையே
கூறி விளங்கிய செவ்விய நாவினையுடைய விளங்கிய
புகழச்சியமைந்த செய்தற்கரிய யாகங்களைச் செய்துமுடித்த, வேதத்தை ஓதிய
அந்தணர் அரிய கலங்களைப் பெற்றுக்கொள்ள அவற்றை நீர் வார்த்துக்
கொடுத்தலால், அந்நீர் பட.
நாவின் அந்தணரென
இயைக்க; "அறங்கரை நாவினான்மறை முற்றிய"
(தொல். சிறப்புப்.). கேள்வியென்றது
கருதியென்னும் பெயர்ப் பொருளது
(பதிற். 21 : 1, உரை.)
7. தகைப்பு:
பட்டினப். 143; பெருங்.
1. 47 : 44, 3. 24 : 200.
6-7. கரிய சேறு
உண்டான மணல் மிக்க முற்றத்தினிடத்தே, களிறு
தான் - நிற்றலை வெறுத்த ஒழுங்கையுடைய, புலவர் பொருநர் அந்தணர்
என்போருக்கு அன்றிப் பிறர் புகுதற்கு அரிய கட்டணத்தில்.
8. அதனது எல்லையினிடத்தே
கூத்தரைக் கண்டால், விரைய.
9. மு.
பதிற். 62 : 3
10. பாண்டில்
- நாரை எதுரு (சிறுபாண். 260. ந,கலித்.
109:4,ந.)
9-11. கூரிய
அம்பு முதலிய ஆயுதங்கள் பக்கரை முதலியவற்றை
அறுத்த, கத்திரிகையால் மட்டம் செய்யப்பெற்ற பிடரிமயிரையுடைய
குதிரைகளையும், விளங்கும் தேர் பூணும் எதுருகளையும் அவற்றிற்கு உரிய
இழைகளை யணிந்து கொடுங்கள் என்று அவ்வீதலுக்கு உரியாரை ஏவி,
அவ்வீதலினிடத்தே அமையாத விரதத்தையுடையாயாதலால்.
11-5. கழலும்படி
இடப்பட்ட தொடியையணிந்த தலைவ, அழகிய
நின்னூரினிடத்தே, கரிய பெரிய ஆகாயத்தில் பல நட்சத்திரங்கள் ஒளி
கெடும்படி சூரியன் தோன்றினாற்போல, பகைவரது மிக்க மாறுபாட்டைக்
கெடுத்த நினது வலிய முயற்சியை வாழ்த்திக் காண்பேனாகி வந்தேன்.
அவ்வயின் சிதைத்த
என இயையும்.
16-8. கரிய
நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த
நெய்தற் பூவினது இதழின் அழகை ஒத்த தோற்றத்தோடு, உயர்ந்த மேகத்தைக்
காட்டிலும் பெரிய பயனை இரவலர்க்குப் பொழிதலை உடையாய். நெய்தல்
மலரின் கருமை சேரன் நிறத்திற்கு உவமை; நிறத்தாலும் மேகம் இவனுக்கு
உவமையாயிற்று.
18-20. ஆதலால்,
பசியைத் தொன்றுதொட்டே உடைய சுற்றத்தாரை
அப்பசி நீங்கும்படி செய்ய அதனாற் புகழ் மேவிய தோன்றல், நின்
பாசறையினிடத்தே.
நின் பாசறையான்
(20) காண்கு வந்திசின் (15) என முடிக்க.
(பி
- ம்.) 13. தோன்றியன்ன. 17. நோக்கமொடு. (4)
| 65.
|
எறிபிண மிடறிய
செம்மறுக் குளம்பிற்
பரியுடை நன்மா விரியுளை சூட்டி |
|