யானைகளோடு நெல்லாகிய
களிற்றைத் திறையாகத் தருதல்: பதிற்.
90 : 6 - 7. ஒன்றுமொழிந்து (4) கொன்று புறம்பெற்ற (6) என இயைக்க.
8. அம்பணம்:
பதிற். 71 : 5: ஐங்குறு.
43 : 1; சிலப். 14 : 209.
8-9. மரக்காலின்
அளவையால் அளந்து உறையிடமுடியாத உணவை
அளிப்பானென்று சொல்லுவார்.
7-9. நெல்லின்
ஆர்பதமென இயைக்க.
9-10. கோபங்கொண்ட
பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்த,
ஒழுங்கையுடைய பகைவரால் குலைத்தற்கு முடியாத படைவகுப்பையும்.
11-12. விடியற்காலத்தே
மேகத்தின் கூட்டத்தையுடைய சிகரத்தை ஒத்த
தோற்றத்தையுடைய பரிசைப்படையின் மேலதாகி எழுகின்ற ஒளி பரவி
விளங்குகின்ற வேலையும்; பரிசைக்கு மேகம் உவமை (பதிற்.
52 : 5, உரை).
எஃகு தோலின்மேற் றோன்றுதல்: பதிற்.
50 : 9.
13. பூமாலைகள்
அசைந்தாற்போலச் சுழலுதலையுடைய வாள்
விழாவையும் உடைய. வாளுக்குப் பூமாலை உவமை; "தூவலி னனைந்த
தொடலை யொள்வாள்" (ஐங்குறு. 206 : 3)
தகைப்பினையும்
(10) எஃகினையும் (12) விழவினையும் (13) உடைய
மள்ளர் (14) என இயைக்க.
14-5. போர்
உண்டாகின்ற வீரர், பனங்குருத்தோடு சேர்த்துத் தொடுத்த,
துர்க்கை வாழ்தலையுடைய வாகைமரத்தினது துய்களை யுடைய பூவைப்போல.
14 - 6. பனந்தோட்டோடு பூவைத் தொடுத்தல்: பதிற்.
67 : 13; புறநா.
100 : 3 - 5, 265 : 2 - 3.
16-7. பூத்த
முல்லைக் கொடியினது புதலைச் சூழ்ந்த வண்டாகிய
பறவை, காட்டினிடத்தே பிடாமரத்தின் தொடுத்தலையுடைய பூக்குலையிலே
தங்குதற்கு இடமான. முல்லைப்பூவிற்கு வெள்ளிய பனங்குருத்தின்
துண்டுகளும், வாகைப் பூவிற்கு வண்டும் உவமை.
18-20. உயர்ந்த
பளிங்கு கலந்த சிவந்த பருக்கைக் கற்களையுடைய
மேட்டு நிலத்தில், விளங்குகின்ற கிரணங்களையுடைய அழகிய மணியை
அவ்விடத்தே வாழ்வார் பெறும் அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய
நாட்டுக்குரியோன்.
காட்டில் மணி
பெறுதல்: பதிற். 21 : 22, 58 : 18 -
9, உரை.
நாடுகிழவோன்
(20) களிற்றோடு நெல்லின் (7) ஆர்பதம் நல்கும் என்ப
(9) என முடிக்க.
(பி
- ம்) 2. யாழ்ப்பாலை. 3. கடறுழந்து செல்லும். (6)
67. |
கொடுமணம்
பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை |
5 |
கொல்படை
தெரிய வெல்கொடி நுடங்க
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பப்
பல்களிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வர |
|