பக்கம் எண் :

201

 25


முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் - ஒழுகுவண்ணம்,
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், பெயர் - பறைக்குர லருவி (24)

     (ப - ரை) 3. சமம் ததைந்த வேலென்றது மாற்றார் செய்யும் சமங்கள்
சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவாறு.

     வேலென்றது வேல்வென்றியினை.

     4, கல்லலைத்த தோளென்றது வலியுடைமையாற் கல்லையலைத்த
தோளென்றவாறு.
    ...............................................................................................................
.....................
தாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள
சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. போர்க் களத்தே ஆண் யானையைச் செலுத்திய
தாளையும். மு. புறநா. 7 : 1.

     2. குதிரைகளோடு பொருத காலின் விளம்பையும்; "கடுமாகடைஇய
விடுபரி வடிம்பின்" (புறநா. 378 : 4)

     3. பகைவர் செய்யும் போர் கெடுதற்குக் காரணமான
வேல்வெற்றியையும். 4. உலகக்கல்லை வருத்திய தோளையும்; "ஆயிரர்,
தொட்டெடுக்க லாவுலம்மொர் தோளி னேந்தி யாடினான்" (சீவக. 690). 5.
வில்லை வருத்திய நல்ல வெற்றியையும்.

     6-7. வண்டு பாட்டைப் பாடுதலில்லாத குளிர்ந்த பனையினது குவிந்த
அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய குருத்தை அணிந்து கொண்டு;
"வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண் டோடு"
(புறநா. 100 : 3 - 4)

     8. கண்ணுக்கு இனிதாகிய சுனையிலுள்ள குவளையாகிய நீர்ப்பூவைச்
சூடி மதம் மிக்கு; "வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்" (பதிற்.
58 : 2)

     9. பகையரசருடைய நிலையாகிய நல்ல போரை வென்று அவரது
மாறுபாட்டைக் கெடுத்து. நிலை நல்லமர் - நாடோறும் செய்து வரும்
நல்ல போர் (பதிற். 4-ஆம் பதிகவுரை)

     10-11. மிக்க சினத்தையுடைய பகையரசரது தலைமையை அழித்த
வென்றி உண்டாதற்குக் காரணமான சிறந்த கழலை அணிந்த வீரர்களுடைய
தலைவனே. கழலணிதல் வெற்றிக்குக் காரணமாதல்: "கடுங்கண் மறவன்
கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை" (பு. வெ. 2)

     தோடுகொண்டு (7) செருக்கிக் (8) கடந்து கெடுத்துத் (9) தொலைத்த
(10) வயவர் பெரும என முடிக்க. வயவர் பெரும: அனைத்தும் ஒரு பெயர்.

     1-11. தாளையும், வடிம்பையும், வேலையும், தோளையும் வலத்தையும்
உடைய பெரும என இயையும்.

     12. விளையாட்டிடத்தும் பொய் கூறுதலை யறியாமைக்குக் காரணமான
வாய்மையையும்; நகை - விளையாட்டு; "நகையுள்ளு மின்னா திகழ்ச்சி"
(குறள். 995)