8.
அருநிறம் திறந்த - பிறரால் துளைத்தற்கரிய மார்பைத்
துளைத்ததனால் உண்டாகிய; நிறம் - உயிர்நிலையுமாம். புண்ணுமிழ் குருதி;
குறிஞ்சிப்.
172.
குருதியின் - இரத்தத்தால்.
9.
மணிநிறம் - நீலமணிபோன்ற நிறம்.
8 - 9. மார்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தின் மிகுதியால் கழியிலுள்ள
நீர் தன் நீலநிறம் மாறிச் சிவப்பாயிற்றென்றபடி.
10. போல - போலாக.
அரண் -
பகைவரது மதில்.
11. முரண் - வலி. ஊக்கலை - செலுத்தும் முயற்சியை யுடையாய்; விளி.
12. மொசிந்து - மொய்த்து. கடம்பு: இப்பாட்டுடைத் தலைவனுக்குப் பகைவரான அரசர்களுள்
ஒருவனது காவல் மரம்.
13. கடியுடை முழுமுதல் - காவலையுடைய அடிமரம். ஏஎய் - ஏவி.
14. வென்று - வஞ்சியாது எதிர் நின்று கொன்று. பணை செய்த
- முரசாகச் செய்த.
12 - 4. பகைவரது காவல்மரத்தை வெட்டி அதைக்கொண்டு முரசு
செய்தல் மன்னர் இயல்பு; "கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை" என்பர்
பின்; 17 : 5; "கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசு" (அகநா.
347 : 4 - 5);
"உதியர், இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட, கடப்ப முதுமுரசங் காணீர்"
(இராசராச.
87)
கடம்பறுத்தது;
பதிற்.
12 : 3, 20:4; அகநா.
127:4;சிலப்.
25:1.
15.
நார் அரி நறவின் - பன்னாடையால் அரிக்கப்படுகின்ற
கள்ளையுடைய. ஆரம் - சந்தனம்; முத்துமாலையுமாம்.
17. தார் - மாலை.
20. கண்டிகும் - கண்டோம்; பதிற்.
43
: 31, உரை; "கண்டிகு மல்லமோ
கொண்கநின் கேளே" (ஐங்.
121)
17 - 20. யானைமேல் கொண்டு பொலிந்த நின் செல்வம் என்க.
21. கவிர் - முள்ளு முருங்கை. கவரி - கவரிமான்.
22. நரந்தம் - நரந்தப்புல்; இது நரந்தை எனவும் வழங்கும்; "நரந்தை
நறும்புன் மேய்ந்த கவரி" (புறநா.
132
: 4)
23. துவன்றிய - நிறைந்த. துவன்றுதல் நிறைவென்னும் குறிப்புணர்த்தும்
என்பதற்கு மேற்கோள் (தொல்.
உரி.34,
ந.; இ. வி. 290)
23 - 4. இமயமும் குமரியும்:
மதுரைக்.
70 - 71;
புறநா. 17
: 1-2.
25. மன் மீக்கூறுநர் - அரசர்களுள் உயர்த்துக் கூறுப்படுபவர்களுடைய.
23 - 5. பதிற்.
43:
7 - 9.
மு. சேரனுக்கு முருகக்
கடவுளை உவமை கூறவந்த புலவர் கடலிற்
சென்று கடிமரந்தடிதலும், களிறூர்தலும் ஆகிய பொதுத் தொழில்களை
இருவர்க்கும் சார்த்தி உரைத்தனர்.
(பிரதிபேதம்.) 4.
ஏமம்புணர்காக்கும். 9. நீனிறம். 10. போலரண்.
13. றுமியவோஒய். 16. வேண்டுதானை. 25. மதந்தப. (1)
|