பக்கம் எண் :

211

     14-5. பொங்குகின்ற பிசிரையுடைய வெள்ளத்தை வற்றச்
செய்யும்பொருட்டுச் சிவந்த ஒளி நிகழ்தலையுடைய வரவை என்னும்
ஊழித்தீயைப் போன்றனை; நுடக்கிய: செய்யியவென்னும் வினையெச்சம்.

     12-5. சூரியரோடு கூடிய வடவைத்தீ: பதிற். 62 : 6 - 8; சூரியர்
படைத்தலைவர்க்கும், வடவைத்தீ சேரனுக்கும் உவமைகள்.

     16. சினம் பொருந்திய குருசிலே, நின்னொடு மாறுபட்ட பகைவருக்கு.

     உடற்றிசினோர்க்கு (16) மடங்கற்றீயின் அனையை (15) என மாறி
இயைக்க.

     (பி - ம்.) 3. நாடென. 4. முதல்வரோம்பினர். 8. துஞ்சலூறும். 14.
பிசிருடக்கிய. (2)

 

73.





உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்
பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே
........................................................................
........................................................................
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
 5




செய்யு ணாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை
 10




கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்மையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும்
 15


சான்றோ ருரைப்பத் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே.

     இதுவும் அது. பெயர் - நிறந்திகழ் பாசிழை.

     (ப - ரை) 1[கூந்தலையுடைய மகளிர், ஒண்ணுதல்பொலிந்த
மகளிரெனக் கூட்டுக.

     நிறந்திகழ் பாசிழையென்றது 2தன்னின் அழுத்திய மணியினும் தன்
நிறம் திகழும் பசும்பொன்னிழை யென்றவாறு.


     1[ ]இவ்விருதலைப் பகரத்திற்கு உட்பட்ட உரைக்குரிய மூலம் ஒரு
பிரதியிலும் கிடைக்கவில்லை.

     2"மின்னி, மணிபொரு பசும்பொன்" (கலித். 143 : 3 - 4)