பக்கம் எண் :

213

     4. மருதம் சான்ற வயல்: மதுரைக். 270.

     4-5. ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த அகன்ற இடத்தையுடைய
விளைகின்ற வயல்களாகிய செய்களில், பயிரை அழிக்கின்ற நாரையைத்
துரத்தும் மகளிர். ஒய்தல்: பதிற். 29:2-7.

     மகளிர் நாரையைத் துரத்துதல்: பதிற். 29 : 2 - 7.

     6-7. பசிய பொன்னாற்செய்த ஆபரணங்களைக் களைதல் இல்லாதவராகி,
ஒன்றுக்கு ஒன்று அண்மையிலுள்ளதாகி அவைதாம் பலவாயிருக்கின்ற
புதிதுபுதிதான குரவைக் கூத்தை இரவிலும் பகலிலும் நிகழ்த்துதற்கு இடமான.
இரவும் பகலும் அயருமென இயைக்க; 'குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு -
ஒன்றற்கு ஒன்று அண்ணிதாகிப் பலவாகிய ஊர்களையுைடைய பெரிய
சோழநாட்டில' (பட்டினப. 28, ந.)

     9. பூழியர் மெய்ம்மறை: பதிற். 90 : 27.

     8-9. காவிரி மிக்குச் சென்ற, நெடுந்தூரத்தே விரிகின்ற அழகினையுடைய
புகார் நகரத்தையுடைய செல்வ, பூழிநாட்டிலுள்ளார்க்குக் கவசம் போன்றாய்.
இதனாற் சோழநாடும், பூழிநாடும் இவன் ஆட்சிக்கு உட்பட்டமை தெரிகின்றது.

     11. கொல்லிப்பொருந: புறநா. 22 : 28; சிலப். குன்றக்.
பாட்டுமடையிறுதி. 10-11. மூங்கில் விரிந்து எழுகின்ற மேகங்கள் தவழும்
உயர்ந்த சிகரங்களையுடைய கொல்லிமலைக்குத் தலைவ; கொடிகளையணிந்த
தேரையுடைய சேரனே.

    11-4. நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின்
    அளவைக் கடந்தனவென்று தாமே அறியவேண்டியவராக
    இருந்தும் யான் பலநாள் சென்று நின்பகைவரிடத்துச்
    சொல்லவும் அவர் அதனைத் தெளியமாட்டாராயினார்.

    14-5. பிறராகிய சான்றோர் அவற்றை எடுத்துச் சொல்லத் தெளிவாரோ
எனக் கருதினால். பிறரும்: உம்மை அசைநிலை. கொல்லென என்பதன்பின்
கருதினென்பதை அவாய்நிலையால் வருவித்து முடிக்க.

    16. அச்சான்றோர் கூறவும் பகைவரது புத்தி மயங்கக் காண்பேன்.

    17. ஆதலால் யான் எவ்வாறு அவர்மனம் தெளியும் வண்ணம்
உரைப்பேனென்று வருந்துவேன்; இதனை அறிந்து நீ அவர்பால் அருள்
செய்தல் வேண்டும்.

    (பி - ம்) 2. நீயாயின். 5. ஒப்புமகளிர். 8. சேய்வரி. 14. யாஞ்சென்று.
                                                     (3)

 

74. கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச்
சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல்
வேறுபடு திருவி னின்வழி வாழியர்
 5 கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்