தெம்முனைப்
(17) புலவரைப் (15) பகைவர் (12) கொடி (14) தோன்றல்
யாவது (15) என 1எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய அதனால்,
வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
முன்னர் ஆறடியும்
வஞ்சியடியாய் வந்தமையானே, வஞ்சித்தூக்கு
மாயிற்று.
(கு
- ரை) 1-2. வெள்ளிய கொம்பையுடைய ஆண்யானைகள் பெரிய
மலைகளைப் போலத் தொகுதிகொள்ள; கொண்டு - கொள்ள; எச்சத்திரிபு.
2-4. பகைவர்
குறுந்தடியை எடுத்து அடித்த, வெற்றியைத் தரும்
முரசம் கார்காலத்து மேகத்தைப் போல மிக்கு ஒலிப்ப. செய்யுளாதலின்
அவரென்னும் சுட்டுப்பெயர் முதலில் வந்தது. விறல்முரசம்: பதிற்.17.5,
உரை.
5-9. பகைவரது
இயல்பு.
5-6. பூசிய சந்தனம்
புலர்ந்த அகன்ற மார்பினையும், வீரவளை
ஒளிவிடும் வன்மையையுடைய முன்கையையும்.
7. புடையலங்கழற்கால்:
புறநா. 99 : 5. 8. "அடியொதுங்கிப்
பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" (மதுரைக்.
37 - 8)
7-8. எப்பொழுதும்
போர் செய்தலால் புண்களையுடைய வன்மையைப்
பெற்ற தோள்களையும், பனைமாலையையும், கழலையணிந்த கால்களையும்,
பின்னே அடியிடாமைக்குக் காரணமான மேற்கோளையும், ஒள்ளிய வாளையும்
உடைய.
9. பகைமையினின்றும்
தவிர்தல் இல்லாத நின் பகைவரது எதிரே நின்று
உலாவி. 10 - 11. பாதுகாத்தலை ஏற்றுக்கொள்பவனாகிய எம் அரசனுக்குத்
திறையை இடுகவென்று. அம்புடைய வெற்றியையுடையராகி உயர்ந்தோராகிய
நின் வீரர் நின்னைப் பரவாநிற்ப.
12. நீ அதற்கேற்ற
தன்மையையுடையை யாதலால்.
13. "காலியக்
கன்ன கதழ்பரி கடைஇ" (மதுரைக். 440)
12-3. பகைவரது,
காற்று எழுந்தாற்போன்ற விரைந்த செலவையுடைய
குதிரைகளால் இழுக்கப்பட்ட, விரைந்த ஓட்டத்தையுடைய உயர்ந்த தேரின்மீது
அசைகின்ற கொடிகள்.
17. தொலையாக்
கற்ப: பதிற். 43 : 31.
15-7. சினத்தாற்
செய்யும் போரையும், நிலவெல்லையில் நிறுத்திய
நல்லிசையையும் அழிவில்லாத கல்வியையும் உடையாய், நின்பகைவரது
நிலவெல்லையில் தோன்றுதல் எங்கேயுள்ளது?
கற்ப, நின்தெம்முனைப்
(17) புலவரையான் (15) நுடங்குகொடி (14)
தோன்றல் யாவது (15) என மாறிக் கூட்டுக.
மு.
திறைகொடுத்தோரது குறைபாடு கூறியது (தொல்.
புறத்.8, ந.) (10)
இதன் பதிகத்துக்
கொல்லிக்கூற்றம் (3) என்றது கொல்லிமலையைச்
சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை.
3. நீர்கூர்மீமிசை
என்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின் உச்சியை.
9. நொச்சிதந்து
என்றது தகடூர் மதிலைக் கைக்கொண்டென்றவாறு.
1எதிரூன்றுவார்
- காஞ்சித் திணைக்கு உரியோர்.
|