பக்கம் எண் :

230


            (பதிகம்)
 



பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் றேவியீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ
 5




டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங்கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
 10
அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை

     1மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: குறுந்தாண்ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ்
பாசிழை! நலம்பெறுதிருமணி! தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை
வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி! புண்ணுடை யெறுழ்த்
தோள். இவை பாட்டின் பதிகம்.

     பாடிப்பெற்ற பரிசில்: தானும் 2கோயிலாளும் புறம்போந்து நின்று
கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு
3அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று
அமைச்சுப் பூண்டார்.

     4தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றிருந்தான்.

     (கு - ரை) பொய்யில் செல்வம் - இரவலர்க்குப் பொய்த்தலறியாத
செல்வத்தையுடைய.

     3. கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினது நீர்மிக்க
மலையின் உச்சியில்.

     4. பல வேற்படைகளையுடைய அதிகமானென்னும் தலைவனோடு;
“உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல், அரவக்கடற் றானை யதிகனும்”
(சிறுபாண். 102 - 3). 5. சோழன், பாண்டியன் என்னும் இரண்டு பெரிய
அரசர்களையும் சேர வென்று.

     6. முரசையும், குடையையும், கீரிடத்தையும் கைக்கொண்டு; “அரைசுபட
வமருழக்கி, உரைசெல முரசுவௌவி” (புறநா. 26 : 6-7)


     1மறு இல் வாய்மொழி - குற்றமில்லாத உண்மையான மொழியையுடைய.
     2கோயிலாள் - பெருஞ்சேரலிரும் பொறையின் பெருந்தேவி.
     3அரசு கட்டில் - சிங்காதனம்.
     4புறநா. 50, கருத்து.