|
(பதிகம்) |
|
பொய்யில்
செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் றேவியீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ |
5
|
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங்கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய |
10
|
அருந்திற
லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை |
1மறுவில்
வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: குறுந்தாண்ஞாயில்,
உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ்
பாசிழை! நலம்பெறுதிருமணி! தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை
வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி! புண்ணுடை யெறுழ்த்
தோள். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற
பரிசில்: தானும் 2கோயிலாளும் புறம்போந்து நின்று
கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு
3அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று
அமைச்சுப் பூண்டார்.
4தகடூரெறிந்த
பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றிருந்தான்.
(கு
- ரை) பொய்யில் செல்வம் - இரவலர்க்குப் பொய்த்தலறியாத
செல்வத்தையுடைய.
3. கொல்லிமலையைச்
சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினது நீர்மிக்க
மலையின் உச்சியில்.
4. பல வேற்படைகளையுடைய
அதிகமானென்னும் தலைவனோடு;
“உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல், அரவக்கடற் றானை யதிகனும்”
(சிறுபாண். 102 - 3). 5. சோழன்,
பாண்டியன் என்னும் இரண்டு பெரிய
அரசர்களையும் சேர வென்று.
6. முரசையும்,
குடையையும், கீரிடத்தையும் கைக்கொண்டு; “அரைசுபட
வமருழக்கி, உரைசெல முரசுவௌவி” (புறநா.
26 : 6-7)
1மறு
இல் வாய்மொழி - குற்றமில்லாத உண்மையான மொழியையுடைய.
2கோயிலாள் - பெருஞ்சேரலிரும்
பொறையின் பெருந்தேவி.
3அரசு கட்டில் - சிங்காதனம்.
4புறநா.
50, கருத்து.
|