பக்கம் எண் :

231

     7. புகழ் மிக்க சிறப்பினையுடைய அட்ட களத்தில் வேள்வியைச்
செய்து; “புலவுக்களம் பொலிய வேட்டோய்” (புறநா. 372 : 12)

     8. குற்றம் நீங்கிய அதிகமானுடைய உரிமை மகளிர் இரங்கும்படி
வன்மையைக் கெடுத்து. 9. தகடூரை அழித்து அதன் மதிலைக் கைக் கொண்ட;
தகடூரை அழித்தது: பதிற். 78 : 9.

                எட்டாம் பத்து முற்றிற்று

                  ஒன்பதாம் பத்து

81.



உலகம் புரக்கு முருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து
 5




காலை யிசைக்கும் பொழுதோடு புலம்புகொளக்
களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
 10




மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ வேணி வியலறைக் கொட்ப
 15




நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் றானை யுதவி
வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்
முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து
 20




சாறயர்ந் தன்ன காரணி யாணர்த்
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயற் கொல்லிப்
 25 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத்