பக்கம் எண் :

235

     32. நின்னுடைய குதிரைகள் நீண்ட தேரைப் பூண்பனவாகுக ; மாள :
முன்னிலையசைச் சொல் ; கலித். 124 : 19; புறநா. 146 : 11.

     33. போரைக் கைவிட்டு நின்முன்னே செல்லாமல்.

     34. முதலில் நின் வலியோடு மாறுபட்டுப் பின் எதிர்க்கப்பெறாத,
வன்மையில்லாத வீரரோடு.

     35. பழையதாகிய குலத்தை நீ அழித்தலை அஞ்சித் தம் அரண்களைப்
பாதுகாப்பாக எண்ணிக்கொண்டு.

     36-7. தூங்காத பகையரசரும் தூங்குக; நின்னுடைய பெருந்
தோள்களுக்கு விருந்தும் ஆகுக.

     துஞ்சாவேந்தர் : “வலமுறை வருதலு முண்டென் றலமந்து, நெஞ்சு நடுங்
கவலம் பாயத், துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” (புறநா. 31 : 15 - 7)

     செல்லாது (33) மள்ளரொடு (34) துஞ்சா (36) என இயையும்.

     (பி - ம்) 7. நுடங்கல. 22, காந்தட்கண்ணி. 27. வண்டுபடு துப்பின். 32.
புனைவினை நெடுந்தேர். 34. தூவின்மள்ளரொடு.      (1)

 

82.



பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
 5 கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை
 10

இன்ன வைகல் பன்னா ளாகப்
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும்
 15

புகன்றுபுகழ்ந் தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே.

     துறை - காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - வினைநவில்
யானை
(4)