பக்கம் எண் :

238

     நெடியோய் (16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்
கையையுடைய (9) வைகல் பன்னாளாக (10), பாடிக் காண்கு வந்திசின் (11)
என முடிக்க.

     (பி - ம்) 3. முன்பிற் செல்வர்.                    (2) 

83.



கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து
 5




செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே
இன்னா தம்மவது தானே பன்மா
நாடுகெட வெருக்கி் நன்கலந் தரூஉநின்
போரருங் கடுஞ்சின மெதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.

     துறை - தும்பையரவம். வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - பஃறோற் றொழுதி
(3)

     (ப - ரை) 1. கைபரிதல் - ஒழுங்கு குலைதல்.

     1மழைக்கு ஒப்பாகிய யானைகளோடு தோல்களையும் (3) 2ஒப்பித்துப்
பெரியவாகக் கூறிய சிறப்பான் இதற்கு, ‘பஃறோற்றொமுதி’ என்று
பெயராயிற்று.

     6. 3பன்மாவென்றது பலபடியென்றவாறு. 7. எருக்கல் - அழித்தல்.

     நின்னைக் காண்பார்க்கு நின்படை செல்கின்ற செலவு (5) 4மழைக்
குழாத்தின்முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்து செல்லும் (1) கொக்
கொழுங்குபோலக் (2) களிறுமிடைந்த பஃறோற்கிடுகின் தொகுதியோடு (3)
தேர்களின் நுடங்குகொடி விளங்காநிற்பப் பொலிவுபெற்றுப் (4) பெருக இனிது;
அவ்வாறு அன்புறுவாரையொழிய (5) அதுதான் இன்னாது ; யார்க்கெனின் (6),
மாறுகொள் வேந்தர் பாசறையோர்க்கு (9) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்படைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. கார்காலத்து மேகக்கூட்டத்தின் முன்னே ஒழுங்கு
குலைந்து எழுகின்ற, சிறந்த பறத்தலையுடைய கொக்கின் நீண்ட வரிசையை
ஒப்ப. பொற்ப : உவம உருபு.


     1“கடாஅ மாறிய யானை போலப், பெய்துவறி தாகிய பொங்கு செலற்
கொண்மூ”, ‘வயவுப்பிடி யினத்தின் வயின்வயிற் றோன்றி, இருங்கிளைக்
கொண்மூ வொருங்குடன் றுவன்றி” (
அகநா. 125 : 8-9, 183 : 8-9)
     2ஒப்பித்து - ஒப்புக்கூறி.
     3பன்மாறு என்பதன் விகாரம் போலும்.
     4தோல்களுக்கு மழை ஒப்பாகக் கூறப்படும் ; “மழையென மருளும்
பஃறோன் மலையெனத், தேனிறை கொள்ளு மிரும்பல் யானை” (புறநா.
17 : 34 - 5)