பக்கம் எண் :

239

     3-4. கொல்லும் ஆண்யானைகள் நெருங்கிய பல கேடகங்களின்
தொகுதியோடு, உயர்ந்த தேரில் அசைகின்ற கொடிகள் விளங்கா நிற்பப்
பொலிவு பெற்று.

     2-4. தேர்மீதுள்ள வெள்ளிய கொடிகளுக்குக் கொக்கு உவமை.

     5. நின்னைக் காண்பார்க்கு நினது சேனை செல்லும் செலவு மிகவும்
இனியது. 6. அதுதானே இன்னாதது ஆகும்.

     6-7. பலபடியாக நாடுகள் அழியும்படி சிதைத்து நல்ல ஆபரணங்களைத்
தருகின்ற நினது. ‘பன்மாணாடு’ என்ற பாடம் சிறக்கும்; பலவாக
மாட்சிமைப்பட்ட நாடுகளென்று கொள்க; “பாடுசா னன்கலந் தரூஉம், நாடுபுறந்
தருத னினக்குமார் கடனே” (பதிற். 59 : 18 - 9)

     8-9. போர்செய்தற்கு இயலாத, மிக்க போகத்தை ஏற்றுக் கொண்டு,
நின்னோடு மாறுபாடுகொண்ட அரசருடைய பாசறையிலுள்ள வீரர்க்கு.
பாசறையோர்க்கு (9) இன்னாது (6) என முடிக்க.

     (பி - ம்) 2. போர்ப்ப. 6. அம்மதானே. 6 - 7. பன்மா, ணாடு (3)

 

84.



எடுத்தே றேய கடிப்புடை யதிரும்
போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதருந் தொழினவில் யானைப்
 5




பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற்
பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப
கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா
பன்மா பரந்தபுல மொன்றென் றெண்ணாது
 10




வலியை யாதனற் கறிந்தன ராயினும்
வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முளை மூங்கிற் கவர்கிளை போல
உய்தல்யா வதுநின் னுடற்றி யோரே
வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப்
 15




போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல
நோய்த்தொழில் மலைந்த வேலீண் டழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ
டுருமெறி வரையிற் களிறு நிலஞ் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
 20

குவவுக்குரை யிருக்கை யினிதுகண் டிகுமே
காலை மாரி பெய்துதொழி லாற்றி