மை - ஆடு. வெண்ணெல்
- ஒருவகை நெல். நனை அமை கள்ளின் தேறல்
- அரும்பினால் அமைத்த கள்ளின் தெளிவு. நீர்ப்படு - மழை நீரில் வருந்திய.
நிலம் தின் சிதார் - மண்ணால் அரிக்கப்பட்ட கந்தை. சிதாருக்குப் பருந்தின்
சிறகு உவமை;
புறநா. 150:
1 - 2.
வீழ,
மாந்தி, களைந்த பின்றையென்க.
21. நூலாத நூலா னியன்ற கலிங்கமென ஒற்றுமை நயம்பற்றிச்
செயப்படுபொருள் மேல் நின்றது.
(தொல். வினை.
37, ந;
இ. வி.
243)
21 - 5. நூலாக்கலிங்கம் - நூற்கப்படாத ‘நூலாலியன்ற ஆடை ;
பட்டாடை. வால் அரைக் கொளீஇ - வெள்ளிய அரையில் உடுத்தி;
வெண்மை: இன்மையைக் குறித்தது. வணர் இருங்கதுப்பின் - வளைந்த
கரிய கூந்தலையுடைய. மகளிரென்றது விறலியரை.
விறலியர் உபகாரிகளால் தரப்பெற்ற இழையை அணிதல்: பொருந.
159-62,
குறிப்புரை; மலைபடு.
569 - 70. அமர்பு - மனம் பொருந்தி. மெய்
ஆர்த்த சுற்றம் - உண்மையைத் தம்மிடத்தே கட்டிய மந்திரி முதலிய
சுற்றத்தார். நுகர்தற்கு - கலந்து மகிழ்தற்கு. சுற்றமொடு மகிழ்வென இயைக்க.
கொளீஇ,
அணிய, மகிழ்வு இனிது என்க.
(பி - ம்) 5.
சோலைப் பிறமான். 11. இழையவாடு நடை. (2)
13. |
தொறுத்தவய
லாரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு வுழா துவித்துநவும்
கரும்பின் பாத்திப்
பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும் |
5 |
கலிகெழு
துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவும்
ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் |
10 |
நாடுகவி
னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் |
15 |
கவைத்தலைப்
பேய்மகள் கழுதூர்ந் தியங்க
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்
|
|