பக்கம் எண் :

263

பதிற்றுப்பத்தில் விட்டுப்போன 1பகுதிகள் சில

1.



இருங்கண் யானையொ டருங்கலந் துறுத்துப்
பணிந்துவழி மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக்
 5




கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசமொடு
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின்
 10
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே.

     [புறத்திரட்டு, பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6, இளம். 8;
.
மேற். அடி, 1: சீவக. 339, . மேற்.]

 2.



இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ வெழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
 5




கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
 10




கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
 15

ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே.

     [தொல். புறத். 12, 25, . மேற்]


     1 முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த இவை
தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தனவாகும்.