பதிற்றுப்பத்தில்
விட்டுப்போன 1பகுதிகள்
சில
|
1.
|
இருங்கண்
யானையொ டருங்கலந் துறுத்துப்
பணிந்துவழி மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் |
5
|
கண்ணதிர்பு
முழங்குங் கடுங்குரன் முரசமொடு
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின் |
10
|
நிலந்திரைப்
பன்ன தானையோய் நினக்கே. |
[புறத்திரட்டு,
பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6,
இளம். 8;
ந. மேற். அடி, 1: சீவக. 339,
ந. மேற்.]
2.
|
இலங்கு
தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ வெழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி |
5
|
கோன்முனைக்
கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் |
10
|
கறங்கிசை
வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ |
15
|
ஒல்லா
மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே. |
[தொல்.
புறத். 12, 25, ந. மேற்]
1
முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த இவை
தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தனவாகும்.
|