பக்கம் எண் :

28

     2. ஏறு தம்முட் பொருதமையினாலே வயல் சேறு பட்டு
உழவேண்டாதனவாயின; செறு - வயல்
(பெரும்பாண். 210-11)

     3. பாத்தியின்கண் பூத்த நெய்தல். கரும்பின் பாத்தி; குறுந். 262 : 7,
குறிப்புரை

     4. எருமையின் நிரை - எருமையின் வரிசை.

     5-6. ஆரவாரம் மிக்க துணங்கைக் கூத்தை மகளிர் ஆடிய இடங்களில்
அவர்கள் அணிந்து வீழ்த்திய ஆம்பல்மலர்களை வளைந்த தலையை யுடைய
முதிர்ந்த பசுக்கள் உண்டன. துணங்கை; "மகளிர் தழீஇய துணங்கை யானும்"
(
குறுந். 31 : :2) என்பதன் உரை முதலியவற்றைப் பார்க்க.

     7. ஒலித்தல் - தழைத்தல் என்பதற்கு மேற்கோள் (சீவக,653,ந.)

     7-10. ஒலி தெங்கு - தழைத்த தென்னை. இமிழ் மருது - கிளி முதலிய
பறவைகள் ஒலிக்கின்ற மருதமரம். வைப்பு - ஊர்கள். கவின் - அழகு. நாமம்
- அச்சம்.

     1-10. பிறழ்ந, வித்துந, தடுக்குந, ஆர்ந: வினையாலனையும் பெயர்கள்.
பிறழ்ந முதலியவற்றையும், தெங்கையும், மருதையும், பொய்கையையும்,
வைப்பையும் உடைய நாடு.

     11-9. பகைவர் நாடு அழிந்தபின் நின்ற நிலை கூறப்படும்.

     11. கூற்றால் அடப்பட்டு நின்ற உடலைப்போல; என்றது பிணத்தை.

     12. சிவந்து-கோபித்து, நீரழி பாக்கம்: உரையைப் பார்க்க; தமது
இயல்பான நீர்மை அழிந்த ஊர்கள் எனலும், நீர்நிலைகள் அழிந்த ஊர்கள்
எனலும் ஆகும். சிவப்பென்னும் உரிச்சொல் வகுளிப்பொருளில் வருவதற்கு
மேற்கோள் (
தொல். உரி. 74, ந.)

     13. புல்லென - பொலிவழிய.

     14. திரிந்த காயையுடைய விடத்தேரையென்னும் முள்மரத்தோடு கரிய
உடைமரமும் வளரப்பெற்று; விடத்தர், உடை : முள் மரவகைகள். விடத்தர்
என்பது விடத்தேர், விடத்தேரை, விடத்தே தொடரி எனவும் வழங்கும்
(
பெரும்பாண். 184 - 5, ந. குறிப்புரை). போகல் என்னும் உரிச்சொல்
நெடுமையை உணர்த்துதற்கு மேற்கோள்
(தொல். உரி. 19, 91, ந.)

     15. 'கவைத்தாட் பேய்மகள்' என்பது பெருவழக்கு. பேய்மகள் பேயை
ஊர்ந்து செல்ல. பேய்மகளும் கழுதும் பரந்து செல்ல எனலும் ஆம்.

     16. ஊரிய - பரந்த. நெருஞ்சியை யுடைய பறந்தலை, நீறாடு பறந்தலை
என்க; நீறு - புழுதி. பறந்தலை-வறுங்களம்.

     17. சாணம் இல்லையான, ஆரவாரம் அழிந்த மன்றம்; மன்றம் பசுக்கள்
தங்கும் இடம். முன்பு தாதெரு நிறைந்து கலிமிக்க மன்றமாக இருந்தது.
இப்பொழுது அவ்விரண்டும் இலதாயிற்று.

     18. உள்ளம் - மனவெழுச்சி. மிடல் தபுத்து வலியை அழித்து.

     19. பனிக்கும் - நடுங்கும்.

     11-9. பாக்கம் யாக்கைபோல, போகி, இயங்க, பறந்தலையையும்
மன்றத்தையுமுடைய பாழ்நிலமாயின; உரையாசிரியர்வேறு முடிபு கூறுவர்.

     20-28. சேரமன்னனாற் பாதுகாக்கப்பட்ட நாட்டின் நிலை கூறப்படும்.