|
20.
காடு - பெருங்காடு. மேன - மேயின = விரும்பப்பட்டன. புறவு
- சிறுகாடு.
21.
மள்ளர் - வீரர்.
20-21.
சீவக. 2578, ந. மேற்.
22.
ஆறு - பெருவழி. அவ்வனைத்து : முற்று.
23.
கூலம் பகர்நர் - நெல் முதலிய பண்டங்களை விற்கும் வணிகர்.
புறந்தரா - பாதுகாத்து.
24.
குடிபுறந்தருநரென்றது வேளாளரை. பாரம் இங்கே குடும்பத்தைக்
குறித்தது; "பகடுபுறந் தருநர் பார மோம்பி" (புறநா.
35 : 32)
25.
அழல் - செவ்வாய். வெள்ளி-சுக்கிரன். செவ்வாயும் சுக்கிரனும்
சேர்ந்தால் மழை இலதாகும் என்பது சோதிட நூற்றுணிபு.
26.
புலம் - இடம். மாரி நிற்ப - மழை பெய்ய.
27.
நோயும் பசியும் நீங்கல் ஒரு நாட்டுக்கு இலக்கணம் (குறள்,
734; சிலப். 5 : 72; மணி.
1 : 71). இகந்து ஒரீஇ - விட்டு நீங்க; ஒரீஇ :
எச்சத்திரிபு.
28
பூத்தன்று - பொலிவு பெற்றது.
23-8.
புறந்தரா, ஓம்பி, காத்த நாடு, ஓடாது நிற்ப ஒரீஇப் பூத்தன்று.
மு.
'இதனுள் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற்றிரிந்த
வேந்தனை அழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறும் கூறிற்று'
(தொல். புறத். 20, ந.)
(பி
- ம்) 1. தொறுத்தகு நீள்வயல். 16. ஊறிய நெருஞ்சி. 24.
குடிபுறந்தாரா. (3)
| 14. |
நிலநீர்
வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரி யையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை |
| 5 |
போர்தலை
மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப |
| 10 |
கூற்றுவெகுண்டு
வரினு மாற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர்
மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பன் |
| 15 |
ஒடுங்கீ
ரோதிக் கொடுங்குழை கணவ |
|