பக்கம் எண் :

37

     24. இவ்வுலகத்தோர் வாழும்பொருட்டு நீ வாழ்வாயாக.

     25 - 6. கள்ளையுண்டமையால் சொல் தடுமாறிய மழலை வார்த்தையைப்
பேசும் நாவையும், மெல்லிய சொல்லையும், இசைக் கருவிகளைக் கொண்ட
பையையுமுடைய பாணர் முதலியோர், குற்றமற்றுத் திருந்திய நரப்புக்
கட்டுக்களையுடைய யாழின் இசையோடு வாழ்த்துக்கூற. உண்டு உரை மாறுதல்:
"உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற், பழஞ் செருக்காளர்"
(மதுரைக். 668 - 9).
கலம் - யாழ் முதலியன. தொடை : இங்கே யாழ்; ஆகுபெயர்.

     27. வெய்துறவு - துன்பமுறுதலை. நந்திய - பெருகிய.

     28. சுற்றமொடு - உறவினர்களோடு.

     29. ஒன்று மொழிந்து - உண்மையையே சொல்லி. அடங்கிய கொள்கை
- ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாட்டினையுடைய; இது புரையோருக்கு
அடை (
புறநா. 191 : 6 - 7)

     30 - 31. இவனது செங்கோற் சிறப்பால் அவ்வூரை விட்டுச் செல்லாது
தங்கித் தவத்தாலாய நுகர்ச்சியைப் பெற்று நரகத் துன்பத்தினின்றும் நீங்கிய,
இவன் நாட்டிலேயே வாழவேண்டுமென்னும் விருப்பத்தையுடைய மேலோர்;
பெருங். 1. 40 : 386 - 8 ம் அடிகளிலும் இக்கருத்து வந்துள்ளது.

     32. மேயினர் - விரும்பி. உறையும் (32) நாடு (34) எனக் கூட்டுக.

     33. புறந் தருதலின் - பாதுகாத்தலினால்.

     34. யாணர் - புது வருவாயையுடைய.

     35. மண்ணுடை ஞாலம் - மண் அணுக்கள் செறிதலையுடைய பூமி.
(
புறநா. 2 : 1). எஞ்சாது - குறையாமல்.

     36. கொடுத்து நீங்காத கையினிடத்துள்ள மிக்க வன்மையினாலே.
கைக்குத் துப்பாவது ஈகை. 38. ஏமம் - இன்பம்.

     39 - 40. திருமாலைப் போன்ற, நல்லபுகழ் அழியாத வன்மையை
யுடையோய். புகழுக்குத் திருமாலை உவமை கூறுதல், "புகழொத் தீயேயிகழுந
ரடுநனை" (
புறநா. 56 : 13) என்பதனாலும் அதன் அடிக்குறிப்பாலும்,
"உரைசால் சிறப்பி னெடியோன்"
(சிலப். 22 : 60) என்பதனாலும்
உணரலாகும்.

     மு. "யாண்டுதலைப் பெயர" என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய
இடம் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின் பாற்படும் (
தொல். புறத். 8, ந.)

     (பி - ம்)
5. கழங்குவழி. 8. கவினிழந்த 10. பீர்வாய் பரந்த. (5)

16. கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற்
றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில
 5 நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு
பேன மாகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி