பக்கம் எண் :

45

     பின் நமக்கு இலதாகுமே என அஞ்சாமற் பெற்றதை உதவுமின்; அவன்
பின்னும் பொய்யாது தருவானென்றபடி.

     (பி - ம்) 7. பெற்ற வுதவுமின். 8. மன்னுயி ரொழிய. 12. பொய்
யிலனசையே. (8)

19. கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச்
 5 செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
 10 தவ்வினை மேவலை யாகலின்
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்
 15 கியார்கொ லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
 20 அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோ வன்றோ தொன்றோர் காலை
 25 நல்லம னளிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.

     துறை - பரிசிற்றுறைப் பாடாண்பட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர்
- வளனறு பைதிரம் (18)