22.
கொய்வாள் - அரிவாள். அறைநர் - கரும்பை வெட்டுதலுடையோர்;
அறை - வெட்டுதல்; "அறைக் கரும்பு" (பொருந.
193)
23.
தீம்பிழி எந்திரம் - இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை.
பத்தலென்றது கரும்பின் சாறு விழும் கூனை; அது சாற்றின் மிகுதியால்
வருந்தியது.
24.
இன்றோ அன்றோ: ஓகாரங்கள் அசைநிலை.
25.
தாம் நல்லமன்; மன் ஒழியிசையின்கண் வந்தது.
27.
மாணாமாட்சிய - மாட்சிமைப்படாத தன்மையை யுடையவாயின.
மாண்டன பல - முன்பு மாட்சிபெற்றிருந்தனவாகிய பல பைதிரங்கள்.
மாண்டன
பல ஒருகாலை நல்ல, அளிய எனச்சொல்லி இரங்க,
மாணாமாட்சியவாயின வென்க; உரையாசிரியர் வேறுவிதமாக முடிப்பர்.
(பி
- ம்.)
4, கழிப்பிச். 12. சிறுமதிமானும். 23.பத்தர்
வருந்த. (9)
20. |
நுங்கோ
யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின் |
5 |
நெடுஞ்சேர
லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே |
10 |
கனவினும்,
ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ |
15 |
விரியுளை
மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட |
20
|
அடாஅ
வடுபகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் |
|