பக்கம் எண் :

53

     8. இதன் பதிகத்து யவனர்ப்பிணித்தென்றது யவனரைப்போருள்
அகப்படுத்தியென்றவாறு.

     9. நெய் தலைப்பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத்
தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க.

     10. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த யவனரைப்
1பின்தண்டமாக அருவிலைநன்கலமும் வயிரமுங்கொண்டென்ற வாறு.

                      (பதிகம்)

  மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசி னுதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மா ணல்லினி யீன்றமகன்
அமைவர லருவி யிமையம் விற்பொறித்
 5 திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபி னாரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
 10 அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறன் மூதூர்த்தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த வணங்குடை நோன்றாள்


     இமையவரம்ப - னெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார்
பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
சான்றோர்மெய்ம்மறை, நிரையவெள்ளம், துயிலின் பாயல், வலம்
படுவியன்பணை, கூந்தல்விறலியர், வளனறுபைதிரம், அட்டுமலர்மார்பன்.
இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில் : உம்பற்காட்டு ஐந்நூறூர் 2பிரமதாயம் கொடுத்து
முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற்பாகம் கொடுத்தான் அக்கோ.

     இமைய வரம்ப னெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.

     (கு - ரை) 4. இமையம் விற்பொறித்தது: அகநா. 396 : 17;
புறநா.
39 : 15- -6; சிலப். 25 : 1 - 2, 118, 28 : 136; மணி. 23:104.


     1பின்தண்டம் - சிறைகொண்டாரை விடுத்தற்பொருட்டுக் கொள்ளும்
திறை.

     2பிரமதாயம் - அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்;
இத்தொடர் சிலாசாஸனங்களிற் பயின்று வழங்கும்