31.
ஊழி ஆக - நெடுங்காலம் வாழ்வு உண்டாகும்படி.
32-7.
மாதேவியின் சிறப்பு.
32.
மண்ணாவாயின்-எண்ணெய் பூசுதல் முதலியன செய்யாவிடத்தும்:
உம்மை தொக்கது. இயற்கை மணம் உள்ளதென்றபடி.
33.
கார்காலத்து மலரும் முல்லைப்பூ மணக்கின்ற தாழ்ந்த கரிய
கூந்தல். முல்லைப்பூ கற்புக்கு அடையாளம்.
33-5.
கூந்தலினின்றும் நீங்கினவைபோல. மழைக்கண்கள்
கூந்தலினின்று ஒருவின மலரைப் போல இருந்தன. அலமரும் - சுழலும்.
36-7.
அசைகின்ற காந்தள் மலர் விளங்கும் நீரையுடைய நிலத்தில்
முளைத்த மூங்கிலையொத்த தோளையுடைய இவள். இவள் என அண்மைச்
சுட்டாற் குறித்ததனால், இச்செய்யுள் சேரனும் அவன் பெருந்தேவியும்
ஒருங்கிருந்தவழிப் பாடப்பெற்றதாகத் தோற்றுகிறது.
38.
வெள்ளம்-ஒரு பேரெண். ஆயிர வெள்ளம் வாழிய :
பதிற்.
63 : 20 - 21.
30-38.
மழை சுரந்து ஊழியாக இவளோடு நீ வாழிய.
(பி
- ம்) 1
- 2. நெஞ்ச, மைந்து. 10. ஊனைத்தழித்த. 12 - 3.
செழுநகர்வரைப்பி, னடுவணெழுந்த. (1)
22. |
சினனே
காமங் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் |
5 |
தீதுசே
ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் |
10 |
மூத்த
யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் |
15 |
ஆகெழு கொங்கர்
நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர் |
|