பக்கம் எண் :

60

 20 அமர்க்கெதிர்ந்த புகன் மறவ ரொடு
துஞ்சமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
 25 நெடுமதி னிரைப்பதணத்
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலி னம்பழிக்கு நரும்
 30 ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பணை சீறினை யாதலிற்
குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பக லமயத்துக்
 35 கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக்
கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகும னளிய தாமே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித் தூக்கும். பெயர் - கயிறுகுறு முகவை (14)

     (ப - ரை) 2. அச்சம்-பகைவர்க்கு அஞ்சுதல். அன்பு - பொருண்
மேலன்பு.

     13. சிரறுசில ஊறியவென்றது பல்லூற்றொழியச் சில்லூற்றாகவூறிய
வென்றவாறு; சிரறுதல் - சிதறுதல்.

     14. கயிறு குறு முகவையென்றது தன்னால் நீர்தாங்குவது
பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவையென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, கயிறுகுறு முகவை' என்று பெயராயிற்று.

     22. தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் கால வழுவமைதி
யெனக் கொள்க. தகைத்தல் - கட்டுதல்.

     23. வில்விசை மாட்டிய விழுச்சீர் 1ஐயவியென்றது விசையையுடைய
வில்லானும் துளையுருவ எய்யமுடியாது மிக்க கனத்தையுடைய 2ஐயவித்துலா
மென்றவாறு.


     116ஆம் பாட்டில் ஐயவியென்பதற்கு அப்புக்கட்டென்றும்
பொருளெழுதினார்.

     2ஐயவித்துலாம்: சிலப் 15; 213