பக்கம் எண் :

64

வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழையொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
 10 போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றேன மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும்
 15 விண்ணுயர் வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைந் ததைந்த காஞ்சியொடு
 20 முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த வாம்பல்
 25 அறாஅ யாணரவ ரகன்றலை நாடே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - ததைந்த காஞ்சி (19)

     (ப - ரை) 1. அலந்தலையெனல் விகாரம்.

     15. விண்ணுயர் வைப்பின காடென்றது மரங்கள் விண்ணிலே செல்ல
வோங்கி.....................; மாறியுரைப்பாரு முளர்.

     19. ததைந்த காஞ்சியென்றது 1விளையாட்டுமகளிர் பலரும் தளிரும்
முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற
காஞ்சியென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'ததைந்த காஞ்சி' என்று பெயராயிற்று.

     23-4. வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பலென்றது விளையாட்டு
மகளிர் குறுதற்கு எட்டாமையாலே மலர்ந்த ஆம்பலென்றவாறு.

     குறாமலெனத் திரிக்க.

     குட்டுவ (10), போரெதிர் வேந்தர் தாரழிந்து ஓராலின் (17), அவர்
அகன்றலை நாடு (25) காடாயின (15); அதனை நின்னயந்து வருவேம்
கண்டனம் (11) எனக்கூட்டி வினைமுடிவு செய்க.


     1மகளிர் காஞ்சி கொய்தல்: "கொய்குழை யகைகாஞ்சித் துறையணி
நல்லூர" (
கலித். 74 : 5)