|
நாஞ்சிலாடா
(2); மத்து உரறிய மனை இன்னியம் இமிழா (3); அவ்வாறு
வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை உடைத்தாகா நின்றது (11); அதன்
செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர் நினைப்பின் (4) நோதக வரும்; நோவேன்
யான் (5) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவறாயிற்று.
நின்
வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச் செலவினை
மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப்பாடாணாயிற்று.
'தேஎர்பரந்த'
(1) என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையால் வஞ்சித்தூக்குமாயிற்று.
'ஆங்கு'
(4) என்பது அடிமுதற் கூன்.
(கு
- ரை) 1 - 3. இவ்வடிகளில் பகைவர்நாட்டின் பழையநிலை
கூறப்படும்.
1. புலம்
- விளை நிலங்கள். பரவா - எதிர்மறை வினைமுற்று.
2. களிறு
- பன்றி; "கேழற் கண்ணுங் கடிவரை யின்றே" (தொல்.
மரபு.
34). நாஞ்சில் - கலப்பைகள்; பன்றிகள் உழுதமையால் வயல்கள் பின்பு
உழுதல் வேண்டாதனவாயின; ‘’கடுங்கட் கேழ லுழுத பூழி, நன்னாள் வருபத
நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறுதினை" (புறநா.
168 : 4 - 6)
3. மத்து
உரறிய மனை - தயிர்கடையும் மத்துக்கள் ஒலித்த
வீடுகள்.இன்னியம் இமிழா - இனிய வாத்தியங்களின் ஓசைகள் கேட்கப்படா.
4. பண்டு
நற்கு அறியுநர் - பழைய நிலைமையை நன்றாக அறிபவர்.
நற்கு - நன்கென்பதன் விகாரம் (மலைபடு,
392, ந.)
4-5.
நினைப்பின் நோதக வரும் என்க. யான் நோகு - நான்
வருந்துவேன். ஓ : அசைநிலை.
6.புரவு
இன்றாகி - உலகத்தைக் காத்தல் இல்லையாகி. வெய்துற்று
வெம்மையுற்று.
7. காலையது
பண்பு வலம் இன்று என - சூரியனுடைய வெம்மை நன்மையை யுடையதன்று என்று.
8. கண்பனி
மலிர்நிறை தாங்கி - கண்களில் பனிக்கின்ற நீரைத் தாங்கி.
8-9.
கை புடையூ சிறுமை கூர - கைகளைப் புடைத்துத் துன்பத்தை
மிக அடைய.
10.
பீர் இவர் வேலி - பீர்க்கங்கொடி படர்ந்த வேலியையுடைய;
பாழ்மனையில் பீர்க்கங்கொடி படர்தல்: "ஊரெழுந் துலறிய பீரெழு முது பாழ்",
"முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து, மனைபாழ்பட்ட"
(அகநா. 167 : 10, 373 : 1 - 2). பாழ்மனை
நெருஞ்சி: "பெருவிழாக் கழிந்த
பேஎமுதிர் மன்றத்துச், சிறுபூ நெருஞ்சியோடறுகை பம்பி" (பட்டினப்.
255 - 6); "பாழூர் நெருஞ்சி" (புறநா. 155
: 4)
11.
மன்னிய - நிலைபெற்றன.
12.
முருகு உடன்று கறுத்த - முருகக்கடவுள் மாறுபட்டுக் கோபித்த;
முருகு - தெய்வத்தன்மை; முருகக்கடவுளுக்கு ஆகுபெயர் (மதுரைக்.
181, ந.).
கலி அழி மூதூர் - ஆரவாரம் அழிந்த பழைய ஊரைப்போல.
|