4-5.
அயிரையாகிய கொழுவிய மீனை உண்ணுதலை யுடையனவாய்
மரந்தோறும் கூடித் தங்குதலால்.6. வெண்குருகு - வெள்ளிய பறவைகள்.
4-6.
குருகு ஒப்பிய ஒலியால் நாரைகளும் இரிந்தன: வெண் குருகு
என்பதைச் சுட்டுப் பொருளதாக்கி முற்கூறிய நாரைகள் என்று
பொருள்கொள்ளுதலும் ஒன்று; நாரை அயிரைமீன் உண்ணுதல்; குறுந்.
128 : 1 - 3, ஒப்புமைப்.
7. அழியா
விழவு: பதிற். 15 : 18. இழியாத் திவவின்
- சுருதியிறங்காத
நரம்புக்கட்டுக்களோடு கூடிய யாழையுடைய. திவவு இங்கே யாழுக்கு ஆயிற்று;
ஆகுபெயர். இது வயிரிய மாக்களுக்கு அடை.
8. வயிரிய
மாக்கள் - கூத்தர். பண்ணமைத்து எழீஇ - பண்களை
நன்றாக அமைத்து இசையை எழுப்பி.
9. மன்றம்
- பொதுவிடம். 8-9. பதிற். 23 : 5-6,
உரை.
10.
அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடத்தையுடைய
ஊர்களையுடைய பகைவர் நாடுகள். அளிய - இரங்கத்தக்கன. மகளிர் குரு
கோப்புதற்கு இடமானவும் விழவினையுடையனவும் வயிரியமாக்கள் பாடுவதற்கு
இடமானவும் ஆகிய வைப்பையுடைய நாடுகள் என்க.
11.
கலந்த பலவகைப்பட்ட தானியங்களோடு இரத்தத்தைப் பலியாக
விரும்பிய.
12.
மயிரொடு கூடிய தோல்போர்த்த முரசினது கரிய அடிக்கும் பக்கம்
கடுமையாக முழங்க. "மயிர்க்கண் முரசு" (சிலப்.
5 : 88) என்பதும், 'புலியைப்
பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி
அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு" என்னும் அதனுரையும்
இங்கே அறிதற்பாலன. 11-2. பதிற்.19:6,
உரை.
13.
அமர்கோள் நேர்இகந்து - போரை விரும்பிக் கொள்ளுதலில்
ஒப்புமை நீங்க; இகந்து-இகப்ப. ஆரெயில் கடக்கும் - பகைவரது அரிய
மதிலை வஞ்சியாது எதிர்நின்று வென்று கைக்கொள்ளும்.
14.
பெரும்பல் யானை: பதிற். 77 : 11 - 2
. பல்யானைச் செல்கெழு
குட்டுவனென்பது இப்பத்தின் பாட்டுடைத் தலைவனான சேரனது பெயர்.
15.
தானை - சேனை. பரவாவூங்கு-பரவிச் செல்லுதற்கு முன்பு.
குட்டுவன்
(14) தானை பரவாவூங்கு (15) வயிரிய மாக்கள் (8) மறுகு
சிறைபாடும் (9) அகன்கண் வைப்பின் நாடு மன் அளிய (10) என முடிக்க.
மு.
'இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறிப்புவகையாற்
கொள்ளவைத்தலின் இது வஞ்சிப்பொருள்வந்த பாடாணாயிற்று' (தொல்.
புறத் .25, ந.)
(பி
- ம்.) 1. அவலெறியுலக்கை. 5. குமுறலின், குழறலின். (9)
30. |
இணர்ததை
ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினக் குருகிறை கொள்ளும் |
5 |
அல்குறு
கான லோங்குமண லடைகரை |
|