10. நெடும்பாரதாயனார்
முந்துறக் காடுபோந்தவென்றது தன்
புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடு போக
அதுகண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன வென்றவாறு.
(பதிகம்)
|
இமைய
வரம்பன் றம்பி யமைவர
உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் |
5 |
கண்ணகன்
வைப்பின் மண்வகுத் தீத்துக்
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகட னீரு மொருபக லாடி
அயிரை பரைஇ யாற்றல்சான் முன்போ
டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி |
10 |
நெடும்பார
தாயனார் முந்துறக் காடுபோந்த |
பல்யானைச்
செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார்
பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை,
ததைந்தகாஞ்சி, சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,
தொடர்ந்தகுவளை, உருத்துவருமலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்றவாயம்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற
பரிசில்: 'நீர் வேண்டியதுகொண்மின்' என 'யானும்
என்பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, 1பார்ப்பாரிற் பெரியோரைக்
கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற்
பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.
இமயவரம்பன்றம்பி
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.
(கு
- ரை) 2. தன் கோல் நிறீஇ - தன் செங்கோற்கீழே அமைத்து.
3. அகப்பா
- ஓர் அரண். அகப்பா எறிந்தது: பதிற். 22
: 26;
நற். 14 : 4 - 5; சிலப்.
28 : 144.
1யாகங்களைப்
பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப்போம் அந்தணர்
(மதுரைக். 494-5,
ந.)
|