32.
அடங்காத பகைவரது மனவெழுச்சி நீங்கும்படி அவர்களை ஓட்டி.
33.
புறக்கொடை எறியார் - பகைவர் புறங்கொடுத்து ஓடும்பொழுது
அவர்மேல் ஆயுதங்களை எறியார்; இவ்வாறு எறியாது நிற்கும் இயல்பைத்
தழிஞ்சியென்னும் துறையின்பாற் படுத்துவர்; "அழிகுநர் புறக்கொடையயில்வா
ளோச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று" (பு. வெ. 55). மறப்படை
கொள்ளுநர் - வீரத்தையுடைய படைத்தலைவர்.
34.
நகைவர்க்கு அரணமாகி - தன்பால் அன்புடையாருக்குப் பாது
காப்பாகி; நகைவர்: பதிற். 37 : 4, 43
: 20; புறநா. 373 : 35.
35.
சூர் நிகழ்ந்தற்று - தெய்வம்பற்றி வருத்தியதுபோல்வது. தானை -
தானையிலுள்ள படைவீரர்: ஆகுபெயர், 36. பல மாண்டனை - இவ்வாறு பல
வகையால் நீ மாட்சிமைப்பட்டாய்.
(பி
- ம்.) 2. மாந்தரோங்குக. 20. நிமிர்ந்தன்ன. 34. நயவர்க்கரணம்.
(1)
32. |
மாண்டனை
பலவே போர்மிகு குருசினீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று |
5 |
துப்புத்துவர்
போகப் பெருங்கிளை யுவப்ப
ஈத்தான் றானா விடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ |
10 |
நெடுமிடல்
சாயக் கொடுமிட றுமியப்
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையு ணாடகப் படுத்து |
15 |
வையா
மாலையர் வசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுத கலிரும்பூதற் பெரிதே. |
இதுவுமது.
பெயர் - கழையமல் கழனி (13)
(ப
- ரை)
8. இடுகழங்கு
தபுநவென்றது இடுகழங்கும் 1அலகுதபுதற்குக்
காரணமாக இருப்பனவென்றாறு.
தபுநவென்றது பெயர்த்திரிசொல்.
1அலகு
- கணக்கு.
|