கருதின் (11) நின்னோடு
போரெதிர்ந்த வேந்தர் பொரமாட்டாது நின்னை
நீங்குவர் (12); இஃது அதுவென வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
வரம்பில்
வெள்ளங் கருதினென எடுத்துச்செலவினை மேலிட்டுக்
கூறினமையான் வஞ்சித்துறைப் பாடணாயிற்று.
'கடிமரத்தான்'
(3) என்றது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையான் வஞ்சித் தூக்குமாயிற்று.
(கு
- ரை) 1. இறும்பூது - வியப்பு. ஆல்: அசை.
2-3.
திருந்திய மணியைப் பக்கத்திலே கொண்ட துடியையொத்த
வலியதாளையுடைய யானையைப் பகைவரது கடிமரத்திலே கட்டி; நோன்றாட்
களிறெனக் கூட்டுக. பகைவரது காவல் மரத்தில் களிற்றைக் கட்டுதல் மரவு
(புறநா. 57 : 10 - 11. 162 : 5 - 6.
336 : 4)
4.
நெடு நீர துறை கலங்க - ஆழமாகிய நீரையுடைய குளங்களின்
துறைகள் கலங்கும்படி. பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகள் உடைத்தல் மரபு;
"கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப், பெரும்புனல் வாய் திறந்த
பின்னும்" (பு. வெ. 56)
5.
மொய்த்துச் சென்று தங்கிய பரந்த படையோடு. மூழ்த்தல் -
மொய்த்தல் (பரி. 10 : 18; பெருங்.
1. 56 : 49)
6.
பகைவர் நாடு கெடும்படி வளைந்து செல்லும் எல்லையற்ற வெள்ளம்
போன்ற படை. வெள்ளம் - ஓரெண் எனலும் ஆம்.
7.
வாட்படையே மதிலாகும்படி வேலாகிய காவற்காட்டை உயரச்
செய்து. வேல்மிளை: "வேன்மிடைந்த வேலியும்" (சீவக.
279, 1846)
8.
விற்பொறிகள் விடுத்த கூரிய முள்ளைப்போன்ற அம்பினையுடைய.
9.
சிவந்த வாயையுடை படைக் கருவிகள் வளைந்த அகழையும். எஃகம்
- ஆயுதப் பொது.
10.
மேகத்தினின்று இடிக்கும் இடியைப் போல முழங்கும்
முரசினையுடைய.
11.
காலால் நடக்கின்ற வெல்லுதற்கரிய அரண், போர் செய்தலைக்
கருதினால்.
7-11.
படையை அரணமாக உருவகம் செய்தார். மதில், மிளை, அகழ்
என்பன அரணத்தின் உறுப்பாதலால் வாட்படையையும் வேற் படையையும்
அம்பொடுகூடிய படையையும் அம்மூன்றாக உருவகித்தார்.
வரம்பில்
வெள்ளமாகிய (6) கால் வழங்கு ஆரெயில் (11) என்று
கூட்டுக.
12.
போரை ஏற்றுக் கொண்ட பகையரசர் தம் கருத்தழிந்து நின்னை
விட்டு நீங்குவார்.
போர்
செய்ய வேண்டாதே எடுத்துச் சென்ற மாத்திரத்திலே பகையரசர்
அஞ்சி ஓடுதல் வியப்புத் தருவதாயிற்று.
மு.
இஃது இயங்குபடையரவம்: இயங்குகின்ற இருபடை யெழுச்சியின்
ஆர்ப்பரவம் (தொல். புறத். 8. ந.) (3)
|