பக்கம் எண் :

124

வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
கடுமிளைக் குண்டு கிடங்கின்
 
25நெடுமதில் நிரைப் பதணத்
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும்
 
30ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பணை சீறினை யாதலின்
குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பக லமையத்துக்
 
35கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக்
கழல்கட் கூகை குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகுமன் னளிய தாமே.
 

துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் : கயிறுகுறு முகவை.

1 - 11. சினனே..............உம்பல்.

உரை : சினன் காமம் கழி கண்ணோட்டம் - கையிகந்த  சினமும்
கையிகந்த  காமமும்  கையிகந்த  கண்ணோட்டமும்; அச்சம்  பொய்ச்
சொல்   அன்பு  மிக  வுடைமை  -  பகைவர்க்கு  மிக  அஞ்சுதலும்
வாய்மையின்   படாதபொய்   சொல்லுதலும்  தொடர்  புடையார்பால்
அளவிறந்த   அன்புடைமையும்;   தெறல்  கடுமையொடு  பிறவும்  -
மையிகந்த தண்டஞ் செய்தலும் இவைபோல்வன பிறவும்; இவ்வுலகத்து
அறம்  தெரி திகிரிக்கு இவ்வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசுமுறை
நடத்தற்கு;    வழியடையாகும்    தீது    -    இடையீடாய்த்   தீது
விளைவிப்பனவற்றை;    சேண்    இகந்து    -   தன்னாட்டின்கண்
இல்லையாக்கி;  நன்று மிகப் புரிந்து - அறத்தையே மிகுதியும் செய்து;
மாக்கள்  -  தன்னாட்டில்  வாழ்பவர்;  பிறர்பிறர் நலியாது - தம்முட்
பிறரைத் துன்புறுத்தாமலும்; வேற்றுப்பொருள் வெஃகாது - பிறர்க்