பக்கம் எண் :

143

ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று
 
10நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில்
 
15நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
 
20றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 
25பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டற் றண்டளிக் கமஞ் சூன் மாமழை
காரெதிர் பருவ மறப்பினும்
 
30பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.
 

துறை : இயன்மொழிவாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : சீர்சால்வெள்ளி.

1 - 5. நெடுவயின்..............தலைவ.

உரை : நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந் தாங்கு -    நெடிய
விசும்பின்கண்   விளங்குகின்ற  மின்னல்  பரந்தாற்போல;  புலியுறை
கழித்த  புலவுவாய்  எஃகம்  - புலித்தோலாற் செய்த உறையினின்றும்
வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி -
நாளும் போரை