துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : தொடர்ந்த குவளை. உரை : எல் வளை மகளிர் - விளங்குகின்ற வளையினையணிந்த இள மகளிர்; தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி - இடையற வின்றித் தொடர்ந்து மலரும் குவளையின் முழுப் பூவைச் சேர்த்து; அலர்ந்த ஆம்பல் அகமடிவையர் - ஆம்பலின் மலர்ந்தபூக்களை அவற்றின் இடையே அகப்படத் தொடுத்த தழையினை யுடுத்து; சுரியல் அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர் கையர் - சுரிந்த தலைமயிரிற் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணி யணிந்து கள்ளுண்ணும் இயல்பினரான; இனிது கூடு இயவர் - இசை இனிது கூட விசைக்கும் இயவர் தங்கியிருக்கும்; துறை நணி மருதம் ஏறி - நீர்த்துறைக்கண்ணிற்கும் மருத மரத்தின்மேல் ஏறி; தெறுமார்- நெற்கதிர்களை மேயும் புட்களை யோப்புதற்காக;தெள் விளி இசைப்பின்- தெளிந்த தம் விளிக்குரலையெடுத்து இசைப்பா ராயின்; பழனக் காவில் பசு மயில் ஆலும் (கம்பலையும்) - வயலருகேயுள்ள பொழில்களில் தங்கும் பசிய மயில்கள் அம் மகளி ரிசைக் கொப்ப ஆடுதலா லெழும் ஆரவாரமும்; பொய்கை வாயில் புனல் பொரு புதவின் - பொய்கையின் வாயிலிடத்தே யமைந்து புனலால் தாக்கப்படும் கதவின் கசிகால்களிற் பூக்கும்; நெய்தல் மரபின் நிரைகள் செறுவின் - நெய்தற் பூவை யூதும் முறைமையினை யுடையவராய் நிரை நிரையா யிரைத்துச் செல்லும் வண்டினம் நிறைந்த |