பக்கம் எண் :

181

ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய 

நான்காம் பத்து

பதிகம்
 

ஆராத் திருவின் சேரலா தற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்
தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்த
குருதிப் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக்
 
  

களங்காய்க்     கண்ணி  நார்முடிச்  சேரலைக்    காப்பியாற்றுக்
காப்பியனார்  பாடினார்  பத்துப்பாட்டு. அவைதாம், கமழ்குரற் றுழாய்,
கழையமல்   கழனி,   வரம்பில்  வெள்ளம்,  ஒண்பொறிக்  கழற்கால்,
மெய்யாடு  பறந்தலை,  வாள்  மயங்கு  கடுந்தார்,  வலம்படு வென்றி,
பரிசிலர்  வெறுக்கை,  ஏவல் வியன்பணை, நாடுகா ணவிர்சுடர். இவை
பாட்டின் பதிகம்.
  

பாடிப்   பெற்ற   பரிசில்   :  நாற்பது     நூறாயிரம்    பொன
ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக்  கோ.
  

களங்காய்க்  கண்ணி  நார்முடிச்    சேரல்     இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.