பக்கம் எண் :

228

ஆசிரியர் பரணர் பாடிய

ஐந்தாம் பத்து

பதிகம்
 

வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்
குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக் கிள்ளி யீன்றமகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
 
5கானவில் கானங் கணையிற் போகி
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை
இன்ப லருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வி லிடும்பிற் புறத்திறுத்
 
10துறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுர னெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து
பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை
1முழுமுத றுமியப் பண்ணி
 
15வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தன் முரற்சியாற்
குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவி னாற்றலை யறுத்துக்
கெடலருந் தானையொடு
 
  

கடல்   பிறக்    கோட்டிய   செங்குட்டுவனைக்   கரணமமைந்த 
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு.
  


1. ‘முரரை   முழுமுதல்’  என்ற  பாடம்   அச்சுப் பிரதியிற்
காணப்படுகிறது