பக்கம் எண் :

230

எடுத்தே றேய கடிப்புடை வியன்கண்
வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து
 
  
25காலுளைக் கடும்பிசி ருடைய வாலுளைக்
கடும்பரிப் புரவி யூர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கட லுழந்த
1தாளே.
   

துறை : காட்சி வாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : சுடர்வீ வேங்கை.

1 - 2. புணர் புரி ...................... பொறுப்ப.

உரை :   புணர்புரி  நரம்பின்  - இசை  புணர்த்தற்கு முறுக்கிய
நரம்பிடை  யெழும்  ;  தீந்  தொடை  பழுனிய - இனிய இசையைச்
செய்வதாகிய;   வணர்   அமை   நல்யாழ்   -   வளை  வமைந்த
கோட்டினையுடைய  நல்ல  யாழை; இளையர் பொறுப்ப ஏவலிளையர்
சுமந்து வர எ - று.
  

யாழிற்   புணர்த்து இசை யெழுப்புதற்காக முறுக்கிய நரம்பாதலின்
‘புணர்புரி   நரம்பு’   என்றார்.   இனிப்   புணர்தல்   மத்தளத்தின்
தாளத்தோடு   பொருந்துத’   லென்றுமாம்.  தீந்தொடை,  இன்னிசை;
“தீந்தொடைச்  செவ்வழிப் பாலை” (சிலப். கானல்.) என்று அடிகளும்
கூறுதல்  காண்க. வணர், யாழ்க்கோட்டின் வளைவு; “வணர் கோட்டுச்
சீறியாழ்”  (புறம்.  155)  என  வருதல் காண்க. நல் யாழ் பேரியாழும்,
இளையர், பாண் மகளிரும், இசை பயிலும் இள மாணாக்கருமாம்.
  

3 -6. பண்ணமை ........................ பழிக்க.  

உரை :  பண்ணமைமுழவும்-பண்ணோடு  பொருந்து  மாறமைந்த
முழாவும்;  பதலையும்  -  ஒருகண்  மாக்  கிணையும்; பிறவும் - பிற
இசைக்கருவிகளும்;   கண்ணறுத்   தியற்றிய  தூம்பொடு  -  மூங்கிற்
கணுவை  யிடைவிட்  டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் என்னும்
வாச்சியத்  தோடு;  சுருக்கி  - ஒருங்கே சேர்த்து; தகைத்த காவில் -
ஒருபுறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே; துறை கூடு கலப்பையர்
-  பாடற்றுறைக்கு  வேண்டிய  கருவி  யெல்லாம் கூடின மூடையைச்
சுமந்தவராய்;  கைவல்  இளையர்  கடவுள் பழிச்ச - இசைத்துறையில்
வல்ல   இளையவர்கள்  தாம்  செல்லும்  வழியில்  தீங்கு வாராமை
குறித்துக் கடவுளைப் பரவி வர எ - று.


1. நாளே - பாடம்