பக்கம் எண் :

242

வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்
தார்கலி வானந் தளிசொரிந் தாஅங்
குறுவ ரார வோம்பா துண்டு
 
20நகைவ ரார நன்கலஞ் சிதறி
ஆடுசிதை யறுத்த நரம்புசே ரின்குரற்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை
வென்றி மேவ லுருகெழு சிறப்பிற்
 
25கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகலவன் பெறுக மாவே யென்றும்
இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும்
 
30தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்பநின் னிலைகண் டிகுமே
நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது
நிரம்பகல் பறிய வேறா வேணி
நிறைந்து நெடி திராத் தசும்பின் வயிரியர்
 
35உண்டெனத் தவாஅக் கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே.
 

துறை : இயன்மொழிவாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : ஏறா வேணி.

1 - 11. கவரிமுச்சி ____ குட்டுவ.

உரை :   கவரி   முச்சி  -  கவரிமான்  மயிர்  கலந்து  முடித்த
கொண்டையினையும்  ;  கார் விரி  கூந்தல்  -  கரிய மேகம்போன்ற
கூந்தலையும்  ;  ஊசல்  மேவல்  -  ஊசலாட்டு  விருப்பத்தையும்  ;
சேயிழை  மகளிர்  -  செவ்விய இழைகளையுமுடைய மகளிர் ; 
உரல்
போல்  பெருங்கால்  -  உரல்போன்ற  பெரிய காலும் ; இலங்குவாள்
மருப்பின்  - விளங்குகின்ற ஒளி பொருந்திய கொம்பும் ; பெருங் கை
-  பெரிய கையும்; மத மா - மதமு முடைய யானைகள் ; புகுதரின் -
தாம்   இருக்கும்  காட்டகத்தே  புகுமாயின்  ;  அவற்றுள்  -  அவ்
யானைகளிடையே   ;  விருந்தின்  வீழ்  பிடி  -  புதியவாய்   வந்து
களிறுகளால்  விரும்பப்பட்டுவரும்  பிடியானைகளையே  வரைந்து   ;
எண்ணு