பக்கம் எண் :

282

காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய
 

ஆறாம் பத்து
 
பதிகம்

  

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு
 
5கபிலையொரு குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவி கொள்வாரிற் குடிபுறந் தந்து
 
10நாடல் சான்ற நயனுடைய நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்
 
  

காக்கைபாடினியார்     நச்செள்ளையார்    பாடினர் பத்துப்பாட்டு.
அவைதாம், வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை,  குண்டுகண் ணகழி,
நில்லாத  தானை,  துஞ்சும்  பந்தர்,  வேந்து  மெய்ம்மறந்த வாழ்ச்சி,
சில்வளை  விறலி,  ஏவிளங்கு  தடக்கை,  மாகூர்  திங்கள்,  மரம்படு
தீங்கனி ; இவை பாட்டின் பதிகம்.
  

பாடிப்     பெற்ற பரிசில் : ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பது
காப்பொன்னும்  நூறாயிரங்  காணமும்  கொடுத்துத்  தன்   பக்கத்துக்
கொண்டான் அக் கோ.
  

ஆடுகோட்     பாட்டுச்     சேரலாதன்    முப்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான்.